Skip to content
November 8, 2025
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Linkedin
  • Whatsapp
eelam 2

ஈழத்தமிழர்களின் செய்தித்தளம்

Primary Menu
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • தாயக செய்திகள்
  • உலக செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • இந்திய செய்திகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
  • யேர்மன்-செய்திகள்
  • திரைப்பக்கம்
  • விளையாட்டு
  • கவிதைகள்
Watch
  • Home
  • 2025
  • April
  • 4
  • ஆனந்தபுரம் எதிரிகளுக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே தமிழரின் வீரத்தை உணர்த்திய இடம்! – சிவசக்தி
  • நினைவில்

ஆனந்தபுரம் எதிரிகளுக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே தமிழரின் வீரத்தை உணர்த்திய இடம்! – சிவசக்தி

ஈழத்தமிழன் April 4, 2025
ananathapuram
Spread the love

ஈழத்தமிழரின் வீரம்பதித்த ஆனந்தபுரம்-

‚ ஆனந்தபுரத்திலை ஆமி பொக்ஸ் அடிச்சிட்டானாம்… எங்கடை கன தளபதியளும் போராளியளும் அதுக்குள்ளையாம்…‘

‚ உப்பிடி எத்தினை பொக்ஸை உடைச்சுவந்த எங்கடை பிள்ளையள்… எப்பிடியும் உடைச்சுப்போட்டு வந்துவிடுவினம்……. ‚

தங்களுடைய தலைகளை இலக்குவைத்து ஏவப்பட்டுக்கொண்டிருந்த குண்டுகளை பொருட்படுத்தாது, தமது காவலர்களாக நிற்கும் போராளிகளைப்பற்றிய தவிப்பும் ஏக்கமும் சுமந்திருந்தார்கள் மக்கள்.

தமிழர்களின் இனஎழுச்சியை எக்காலத்திலும் அடக்கி ஒடுக்கிவருகிறது சிங்களப் பேரினவாதம்.  உரிமைகளை மறுதலித்துவரும் இந்த சிங்கள இனவாதத்தின் கோரமுகம்,  பல்வேறு காலகட்டங்களில் தமிழர்கள்மீதான படுகொலைகளாக வெளிப்பட்டிருக்கின்றது.

தமிழர்களின் வரலாறு இத்தகைய அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் தனது பக்கங்களில் அவ்வப்போது பதிவுசெய்திருக்கிறது. அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு அனைத்துலகப் போர்விதிகளுக்கு முரணாக ஆனந்தபுரத்தில் இலங்கைப்பேரினவாதம் நிகழ்த்திய கொடூரம் இன்று நினைவுகொள்ளத் தக்கது.

அந்தக் கொடூரமான சம்பவம் நடைபெற்று பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் ஆறாதவடுவாக இது இன்றும் நிலைத்திருக்கின்றது.

முல்லைத்தீவு மவாவட்டத்தின் ஆனந்தபுரப்பகுதி அது. இந்தப்பகுதியில் 2009 ஏப்பிரல் மாதத்தில் முதல்வாரத்தில் மிகுந்தபரபரப்பாக இருந்தது.

‚ எப்பிடியாவது எங்கடைபிள்ளையள் ஆமியைக் கலைச்சுப்போடுவாங்கள்… நாங்கள் ஊருக்கு திரும்பிப் போவம்… ‚

இந்த நம்பிக்கையில் ஒருதுளிகூட குறையாதவர்களாக மக்கள் இருந்தார்கள்.

மக்களின் நம்பிக்கைக்கு உயிரூட்டுவதுபோல, ஆனந்தபுரத்தில் தேசியத்தலைவர் அவர்களின் தலைமையில், பாரிய ஊடுருவற்தாக்குதல் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தது.

30 ஆண்டுகால தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில், குறுகியகால மிகப்பெரிய திட்டமிடல் தாக்குதலாக ஆனந்தபுரம் தாக்குதல் அமைந்திருந்தது. மாவிலாற்றிலிருந்து தொடர்ச்சியாக பாரிய உயிர் மற்றும் படைக்கல இழப்புகளைச் சந்தித்து வந்த சிங்களப்படையினர், உலகநாடுகள் பலவற்றின் திட்டமிடலோடு, மூர்க்கமான இனவழிப்பு போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

வன்னிப்பெருநிலப் பரப்பில் பெரும்பகுதியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துவிட்ட நிலையிலும், ஆக்கிரமிப்பு இராணுவத்தை விரட்டியடிக்கும் அல்லது துவம்சம் செய்யும் உக்கிரத்தோடு, தாக்குதலுக்கான திட்டம் தேசியத்தலைவர் அவர்களால் தீட்டப்பட்டது.

தேசியத்தலைவர் அவர்கள் நேர்நின்று வழிகாட்ட, மூத்த முன்னணித் தளபதிகளும் பல நூற்றுக்கணக்கான போராளிகளும் ஆனந்தபுரக் களத்தில் நின்றனர். ஆக்கிரமித்து நிற்கும் படையினரை விரட்டி, தம்மின உறவுகளின் வாழ்நிலத்தை மீட்டெடுக்கும் ஓர்மம் அவர்களுக்குள் பொங்கிக்கொண்டிருந்தது. அனைத்துப் போர்வலுவையும் அங்கு அவர்கள் குவித்திருந்தனர்.

ஆனால், வல்லாதிக்க சக்திகள் நுட்பமான தொழில்நுட்பத்துடன் கூடிய புலனாய்வு தகவல்களை வழங்கி சிங்களப்படையினருக்கு பேருதவி புரிந்ததன. இதன்விளைவாக ஆனந்தபுரத்தில் போராளிகளின் போர்முனைப்பு எதிரிப்படைகளுக்கு கசிந்தது.

எதிர்வினையாக  சிங்களப்பேரினவாதத்தின் குரூரசிந்தனை திட்டமிட்டது. விடுதலைப் போராளிகளை சுற்றிவளைத்து, அவர்களின் விநியோக வழிகளைத் தடுத்தது. அத்துடன், அனைத்துலகப் போர்விதிமுறைகளுக்கு முரணாக, தடைசெய்யப்பட்ட போர் உபகரணங்களையும் நச்சுக்குண்டுகளையும் பயன்படுத்தி, தாக்குதலையும் மேற்கொண்டது.

மன்னராட்சிக்காலத்தின் முன்னைய வரலாற்றில் எவராலும் வெல்லப்பட முடியாத வீரனாகத் திகழ்ந்தவன் எல்லாளன் என்னும் எங்கள் மூதாதையன். எல்லாளனை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் வீரத்திறனற்ற துட்ட கெமுனு எல்லாளன்மீது தீராத பகைகொண்டிருந்தான்.

ஒருமுறை நேருக்கு நேராக நிகழ்ந்த போரில், குதிரைமீதிருந்து வழுவிய மாவீரத்தமிழ்மன்னன் எல்லாளனை, சூழ்ச்சியாக வென்று மார்தட்டிய பேரினவாத சிந்தனையிலூறிய துட்டகெமுனுவைப் போலவே, எம்மினப் போராளிகளையும் தளபதிகளையும் சூழ்ச்சியால் வீழ்த்தி வெட்கமற்று, வெற்றிக்கூச்சலிட்டது சிங்களப்பேரினவாதம். இந்திய அமைதிப்படையால் கூட அழிக்கமுடியாத தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை தாம் அழித்துவிட்டதாக அவர்கள் முரசறைந்தார்கள். ஆனால் இந்தக் கூச்சலின் பின்னணிகளை தமிழ்மக்களும் நன்கறிவர்.

இந்த நடவடிக்கையில், எக்கணத்திலும், எச்சூழ்நிலையிலும் தம்முயரை ஈகம் செய்யத் துணிந்திருந்த பிரிகேடியர்களான கடாபி, தீபன், விதுஷா , துர்க்கா, மணிவண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான ஆண்பெண் போராளிகள் மாவீரர்களானார்கள். எதிரியின் சூழ்ச்சியின் விளைவாக தாம் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்துகொண்ட நிலையிலும் பின்வாங்க மறுத்து, இறுதிக்கணத்திலும் தம் மக்களுக்காக உயிர்களை அர்ப்பணித்துச் சென்றனர் இந்த வீரப்புதல்வர்கள்.

இவர்களில் பலருக்கு பெற்றவர்கள் இருந்தார்கள். குடும்பம், மனைவி, பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக தாய்நாட்டையும் தம்மினத்தையும் நேசித்தார்கள் இவர்கள். அதனால்தான் தம்மினத்தவர்களை அழிக்கவந்த படையினரை அழிக்க வீரசபதமேற்றார்கள்.

வாளெடுத்து வெல்லமுடியாதென்று வஞ்சனையால் வீழ்த்தப்பட்டார்கள் இந்த மானமாமறவர்கள் என்பதை இந்த உலகம் அறியும். ஆனாலும் பல்வேறு சுயநலன்களுக்காக எமது மாவீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் உலகம் திரைபோட்டு மறைத்துவருகின்றது. எனினும், தாங்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த மக்களின் அச்சமற்ற வாழ்வுக்காக தங்களையே அர்ப்பணித்துச் சென்றிருக்கிறார்கள் இவர்கள். இவர்களின் உயிர்ககொடைகளை ஒருபோதும் எம்மினம் மறந்துவாழாது என்பது உறுதி.

இலங்கை என்பது ஒரேநாடு என ஒருபுறத்தில் கூவிக்கொண்டு, அதேநாட்டில் வாழும் தமிழ்மக்களை அடக்கி ஒடுக்கி இல்லாதொழித்துவிட படாதபாடுகள் பட்டுக்கொண்டிருக்கிறது சிங்களப் பேரினவாதம்.

ஆனந்தபுரம் நாங்கள் தோற்றுப்போன இடமல்ல. எங்களின் இனமானம் நிலைநிறுத்தப்பட்ட இடம். இனத்தின் துயரம்துடைக்க ஒவ்வொரு வீரத்தமிழனும் தன்னுயிரை ஒப்புக்கொடுக்கத் தயங்கமாட்டான் என்பதை எதிரிகளுக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே உணர்த்திய இடம்.

மக்களின் துயர்கண்டு துடித்தெழுந்த போராளிகள் இறுதிக்கணம் வரை அசையாது நின்று,  தாம்நேசித்த மக்களின் துயரற்ற வாழ்விற்காக தீயிற் குளித்தார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் தம் நெஞ்சிற்பதித்துக் கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். மற்றவர்கள் வாழ்வதற்கான தெய்வீகத் துறவறத்தை மேற்கொண்ட இவர்களின் ஈகம் ஒப்பற்றது.

தாங்கள் போரிடுவது ஈவிரக்கமற்ற கொடிய எதிரிகளுடன் தான் என்பதை எப்போதும் எம்வீரர்கள் தெரிந்துதான் இருந்தார்கள். இவர்கள் தம்முயிர்களை தம்மினத்து மக்களுக்காகவே அர்ப்பணம் செய்தார்கள். இவர்களின் உயிர்களின்மீது ஆணைசொல்லி, முரண்களைக் களைந்து உலகத்தமிழர்கள் ஒருமித்து நிற்பதே இவர்களுக்கு செய்யும் உண்மையான வணக்கமாக அமையும்.

‚ அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை ‚

                                       என்கின்ற வள்ளுவனின் கூற்றுப்படி, நியாயமான முறையில் கிடைக்கும் வெற்றிதான் நிலைத்து நிற்கும் என்பதை காலம் ஒருநாள் சிங்களப் பேரினவாதத்திற்கும், வல்லமைமிக்க உலகநாடுகளுக்கும் உணர்த்தும். அந்த நாளுக்காக காத்திருப்போம்.

 நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். இந்தவிதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும் ‚ என்ற எம் தேசியத் தலைவரது கூற்று மெய்யாகும்.

Continue Reading

Previous: இலங்கையை வந்தடைந்த நரேந்திர மோடி
Next: இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் : விஜய்

Related Stories

nimalarasan
  • நினைவில்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவேந்தல்

ஈழத்தமிழன் Oktober 19, 2025
swiss
  • நிகழ்வுகள்
  • நினைவில்

சுவிசில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025

ஈழத்தமிழன் Oktober 13, 2025
germanii
  • நிகழ்வுகள்
  • நினைவில்

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

ஈழத்தமிழன் Oktober 13, 2025

நிகழ்வுகள்

568437929_24767916959574552_1938214010702556023_n
  • நிகழ்வுகள்

S.G சாந்தன் அவர்களின் நினைவாக காலக்குரல் எனும் தலைப்பில் இளையோர்களுக்கான பாடல் போட்டி சர்வதேசரீதியாக

ஈழத்தமிழன் Oktober 20, 2025
சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2025  kalai

சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2025 

Oktober 14, 2025
சுவிசில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025 swiss

சுவிசில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025

Oktober 13, 2025

துயர் பகிர்தல்

Screenshot
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி கனகலிங்கம் சிந்தாமணி

ஈழத்தமிழன் November 7, 2025
துயர் பகிர்தல் திருமதி.அருனா சந்திரகுமாரன் (சந்திரன்) 561643935_10162759920379504_8937714987442456477_n (1)

துயர் பகிர்தல் திருமதி.அருனா சந்திரகுமாரன் (சந்திரன்)

Oktober 21, 2025
துயர் பகிர்தல் திரு கந்தசாமி செல்லையா(புங்குடுதீவு) 568260420_1273453878129657_8023059933328256706_n

துயர் பகிர்தல் திரு கந்தசாமி செல்லையா(புங்குடுதீவு)

Oktober 19, 2025

உலக செய்திகள்

577572069_26310044141929833_4215364214412254433_n
  • உலக செய்திகள்

கனடாவில் 06 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் 25 ஆண்டு ஆயுள்தண்டனை

ஈழத்தமிழன் November 7, 2025
நியூயோர்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி மம்தானி Mamdani

நியூயோர்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி மம்தானி

November 5, 2025
அமெரிகாவில் சரக்கு விமானம் விபத்து: 3 பேர் பலி! பலர் காயம்! ame

அமெரிகாவில் சரக்கு விமானம் விபத்து: 3 பேர் பலி! பலர் காயம்!

November 5, 2025

திரைப்பக்கம்

w
  • திரைப்பக்கம்

பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.

ஈழத்தமிழன் September 23, 2025
செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம் pommai

செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம்

September 3, 2025
யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம். 524345411_1341398317995483_7021057234526287065_n

யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்.

Juli 28, 2025

நினைவில்

nimalarasan
  • நினைவில்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவேந்தல்

ஈழத்தமிழன் Oktober 19, 2025
சுவிசில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025 swiss

சுவிசில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025

Oktober 13, 2025
யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு germanii

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

Oktober 13, 2025

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025

விளையாட்டு

Janith-Liyanage-1-2-696x557 (1)
  • விளையாட்டு

ஆசியக்கிண்ண குழாத்தில் இணையும் ஜனித் லியனகே!

ஈழத்தமிழன் September 10, 2025
இலங்கை – இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது! England-set-tour-Sri-Lanka-696x464

இலங்கை – இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

August 23, 2025
தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடியில் தங்கம் வென்று நிந்தவூர் மதீனா கழகம் சாதனை kabaddi-cover-1-1-696x464

தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடியில் தங்கம் வென்று நிந்தவூர் மதீனா கழகம் சாதனை

August 18, 2025

மருத்துவம்

France_rajeevan_IMG-20250906-WA0001
  • மருத்துவம்

கல்லீரலை குறிவைத்து தாக்கும் புதிய வைரஸ்! – அச்சம்!!

ஈழத்தமிழன் September 6, 2025
தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் chichen

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

März 17, 2025
இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள் th

இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள்

Januar 7, 2025

You may have missed

kanava
  • யேர்மன்-செய்திகள்

ஜேர்மனியில் 19 வயது தமிழ் யுவதி அர்ச்சனாவைக் காணவில்லை!

ஈழத்தமிழன் November 7, 2025
sada
  • தாயக செய்திகள்

குமுழமுனையில் கொடூரம்- மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் பாய்ந்து உயிரை விட்ட கணவன்

ஈழத்தமிழன் November 7, 2025
kaithu
  • தாயக செய்திகள்

நெடுந்தீவில் தொல்பொருள் சின்ன சேதம்: பிரதேச சபை தவிசாளர் உட்பட ஆறு பேர் கைது!

ஈழத்தமிழன் November 7, 2025
kaithu
  • தாயக செய்திகள்

யாழில் வாள்கள், கைக் கோடரிகள், போதைப்பொருட்களுடன் 9 பேர் கைது

ஈழத்தமிழன் November 7, 2025

திரைப்பக்கம்

பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள். w

பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.

September 23, 2025
செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம் pommai

செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம்

September 3, 2025
யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம். 524345411_1341398317995483_7021057234526287065_n

யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்.

Juli 28, 2025
இலங்கைக்கான படையெடுப்பு? ravi

இலங்கைக்கான படையெடுப்பு?

Juli 20, 2025
இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்! Cinema_tharshi_vedan

இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்!

Juli 14, 2025
மூச்சடங்காத இரவுகள் எனும் முழு நீளத் திரைப்படம்..நோர்வே திரையரங்கில். 511969283_24554454107473788_2269085620449244250_n

மூச்சடங்காத இரவுகள் எனும் முழு நீளத் திரைப்படம்..நோர்வே திரையரங்கில்.

Juni 27, 2025
April 2025
M D M D F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« März   Mai »
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.