வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இரண்டாம் நாள் இன்றாகும்.
இரண்டாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளன.
நேற்று (29) கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜுலை 27 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும்.
