பாதுகாப்பு நோக்கங்களுக்காக கைத்துப்பாக்கிகளை வழங்குமாறு கோரி 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.
எனினும் பாதுகாப்புக்காக துப்பாக்கி கோரவில்லை . அரசாங்கம் துப்பாக்கி தந்தால் எனக்கு பயிற்சி இல்லாமலே துப்பாக்கியை கையாள முடியும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் ஊடகவியலளார்களிடையே கருத்து தெரிவிக்கையில் சிறீதரன் இதனை தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை உள்ளிட்ட பல சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு கோரி வருகின்றனர்.
இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன மற்றும் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதலில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்கள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை எந்தவித இடையூறும் இல்லாமல் பாதுகாப்பான சூழலில் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தனர்.
அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்று, மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
