Skip to content
Dezember 7, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • உலக செய்திகள்
  • வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 02 (November 02)
  • உலக செய்திகள்

வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 02 (November 02)

ஈழத்தமிழன் November 2, 2025
1762034393

நவம்பர் 2 (November 2) கிரிகோரியன் ஆண்டின் 306 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 307 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 59 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 619 – மேற்குத் துருக்கிய கானேடின் ககான் சீன அரண்மனை ஒன்றில் கிழக்குத் துருக்கியக் கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டார்.
  • 1675 – பிளைமவுத் குடியேற்ற ஆளுநர் யோசியா வின்சுலோ நரகான்செட் பழங்குடியினருக்கு எதிரான போரில் குடியேற்ற இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார்.
  • 1795 – ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான்சில் நிறுவப்பட்டது.
  • 1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர்.
  • 1868 – நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.
  • 1868 – இலங்கையில் சப்ரகமுவாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.[1]
  • 1889 – வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா ஆகிய குடியேற்றங்கள் ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.
  • 1899 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிசிமித் பகுதியை 118 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.
  • 1912 – பல்கேரியா உதுமானியப் பேரரசை லூல் பர்காசு சமரில் தோற்கடித்தது.
  • 1914 – முதலாம் உலகப் போர்: உருசியா உதுமானியப் பேரரசுடன் போரை ஆரம்பித்தது. இதனை அடுத்து தார்தனெல்சு நீரிணை மூடப்பட்டது.
  • 1917 – உருசியப் புரட்சியை முன்னெடுக்க பெத்ரோகிராத் சோவியத்தின் இராணுவ புரட்சிச் செயற்குழு தனது முதலாவது கூட்டத்தைக் கூட்டியது.
  • 1917 – பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் ஆர்தர் பால்போர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலத்தீன நிலத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.
  • 1920 – அமெரிக்காவில் பென்சில்வேனியா, பிட்சுபர்கில் முதலாவது வணிக-நோக்கு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.
  • 1936 – பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.
  • 1936 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.
  • 1949 – இடச்சு-இந்தோனேசிய வட்டமேசை மாநாடு முடிவடைந்தது. நெதர்லாந்து இடச்சு கிழக்கிந்தியாவின் உரிமையை இந்தோனேசியாவுக்குக் கொடுத்தது.
  • 1951 – சுயஸ் கால்வாய் வலயத்தில் கிளர்ந்த நெருக்கடி நிலையை சமாளிக்க 6,000 பிரித்தானியப் படையினர் எகிப்துக்கு அனுப்பப்பட்டனர்.[2]
  • 1953 – பாக்கித்தான், பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.
  • 1956 – அங்கேரியப் புரட்சி: அங்கேரிய நிலைமை குறித்து ஆராய சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் ஏனைய கம்யூனிச நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார். சோசப்பு பிரோசு டிட்டோவ்சின் ஆலோசனைக்கு அமைய யானொசு காதார் அங்கேரியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டார்.
  • 1956 – சூயெசு நெருக்கடி: இசுரேல் காசாக்கரையை ஆக்கிரமித்தது.
  • 1963 – தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.
  • 1964 – சவூதி அரேபியாவின் மன்னர் சவூத் குடும்பப் புரட்சி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பைசல் மன்னரானார்.
  • 1965 – வியட்நாம் போரில் நேப்பாம் குண்டுகள் வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நண்பர்களின் சமய சமூகத்தைச் சேர்ந்த நார்மன் மொரிசன் என்பவர் பென்டகன் முன்னே தீக்குளித்து மாண்டார்.
  • 1966 – கியூபாவைச் சேர்ந்த 123,000 பேருக்கு ஐக்கிய அமெரிக்காவில் நிரந்தர வதிவுரிமை வழங்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது.
  • 1974 – தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர்.
  • 1984 – அமெரிக்காவில் 1962 இற்குப் பின்னர் முதல் தடவையாகப் பெண் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
  • 1999 – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகையாளருமான அற்புதராஜா நடராஜா கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3]
  • 2000 – பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.
  • 2006 – ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  • 2007 – இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
  • 2007 – மெக்சிகோவின் கிரிஜல்வா ஆறு பெருக்கெடுத்து 50 ஆண்டுகளில் காணாத அளவு பாரிய வெள்ளம் ஏற்பட்டதில் 800,000 பேர் வீடற்றவர்களாகினர்.

பிறப்புகள்

  • 971 – கசினியின் மகுமூது (இ. 1030)
  • 1795 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவர் (இ. 1849)
  • 1815 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1864)
  • 1833 – மகேந்திரலால் சர்க்கார், இந்திய மருத்துவர் (இ. 1904)
  • 1861 – ஜூல்ஸ் கூலட், பிரான்சிய பூச்சியியலாளர் (இ. 1933)
  • 1885 – த. வே. இராதாகிருட்டிணன், தமிழகத் தமிழறிஞர்
  • 1885 – ஆர்லோவ் சேப்ளே, அமெரிக்க வானியலாளர் (இ. 1972)
  • 1906 – பெங்கித் எட்லேன், சுவீடிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1993)
  • 1929 – அமர் கோ. போசு, அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2013)
  • 1933 – பெ. சு. மணி, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2021)
  • 1941 – அருண் சோரி, இந்திய அரசியல்வாதி, பத்திரிகையாளர்
  • 1948 – ஜோதிலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2016)
  • 1965 – சாருக்கான், இந்திய நடிகர், தயாரிப்பாளர்
  • 1966 – டேவிட் சுவிம்மர், அமெரிக்க நடிகர்
  • 1969 – மதுஸ்ரீ, இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
  • 1977 – ரேஷ்மா ஷெட்டி , அமெரிக்கக் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை, பாடகர்
  • 1981 – ஈஷா தியோல், இந்திய நடிகை
  • 1981 – மிட்செல் ஜோன்சன், ஆத்திரேலியத் துடுப்பாளர்
  • 1987 – பாலா சரவணன், தமிழ்த் திரைப்பட நடிகர்
  • 1990 – கெண்டல் ஸ்மித், அமெரிக்கப் பாடகர், நடிகர்
  • 1995 – நிவேதா தாமஸ், இந்தியத் திரைப்பட நடிகை

Post navigation

Previous: தமிழர்களின் பாதுகாப்பு, நீதியை உறுதிப்படுத்துவது அவசியம் – மைக்கேல் மெக்நமாரா
Next: லண்டன் சென்ற ரயிலில் கத்தி குத்து தாக்குதல் – 09 பேர் ஆபத்தான நிலையில்!

Related Stories

nilanadu
  • உலக செய்திகள்

அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
theevirava
  • உலக செய்திகள்

பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது

ஈழத்தமிழன் Dezember 6, 2025 0
thavam
  • உலக செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக யாழ் தமிழர் நியமனம்

ஈழத்தமிழன் Dezember 6, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

1002657715 (1)
  • தாயக செய்திகள்

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...
மேலும் Read more about யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்
வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்! vadamarachi 1 (1)
  • தாயக செய்திகள்

வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!

Dezember 7, 2025 0
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது 4 (1)
  • தாயக செய்திகள்

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

Dezember 7, 2025 0
கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர் 596023087_2780280975475636_7159256228982915213_n (1)
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்

Dezember 7, 2025 0
கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி ! sada
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி !

Dezember 7, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

1002657715 (1)
  • தாயக செய்திகள்

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
vadamarachi 1 (1)
  • தாயக செய்திகள்

வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
4 (1)
  • தாயக செய்திகள்

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
596023087_2780280975475636_7159256228982915213_n (1)
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.