சுவிட்சர்லாந்திலிருந்து அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்ட வந்த விமானம் இன்று (6) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
உதவிப் பொருட்களில் நீர் சுத்திகரிப்பான்கள் மற்றும் அவற்றின் செயல்பாட்டிற்குத் தேவையான பல உபகரணங்கள் உள்ளன.
2.6 மெட்ரிக் தொன் எடையுள்ள இந்த உதவிப் பொருட்கள் 17 பொதிகளைக்
இலங்கைக்கான சுவிஸ் துணைத் தூதர் ஒலிவர் பிராஸ் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வின் போது விமான நிலையத்தில் இருந்தனர்.
