
நாட்டை விட்டு 5,000 ற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளியேறி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (6) நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வெளிநாடுகளில் வைத்தியத்துறைக்கு தகுதி பெற்று அங்கு செல்லுவதற்கு வைத்தியர்கள் எதிர்பார்ப்பதாகவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியர்கள் நாட்டில் தங்கியிருந்து பணியாற்றக்கூடிய ஒரு சூழல் இன்று இல்லை.
வைத்தியர்களுக்கு நியமனம் வழங்குவதைப் போல வைத்தியர்களை நாட்டிலேயே பணியாற்றக்கூடிய ஒரு சூழலையும் ஏற்படுத்திக் கொடுங்கள் என அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.