
யாழ்ப்பாணம்(Jaffna) – கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பில் வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த நபர் பிரித்தானிய நாணயங்களை மாற்ற சென்ற நிலையில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கி அதிகாரிகளின் செயற்பாடு தொடர்பில் வங்கி மேலாளரிடம் முறையிட்ட வேளை அவரும் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான வங்கி அதிகாரிகளினால் வாடிக்கையாளர்கள் பலர் தினமும் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.