
யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் கடந்த 4 ஆம் திகதி குளவிக்கொட்டுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய தலைமை ; இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு
சிறுப்பிட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நவரத்தினம் கேதீஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
குறித்த இளைஞன் தனது வாகனத்தில் நித்திரையில் இருந்தபோது குளவி கொட்டியுள்ளது.
இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கு கடூழிய சிறை
வலி தாங்கமுடியாமல் யாழ். போதனா வைத்தியசாலையில் இளைஞன் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல்கூற்று சோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.