
கனடாவில் சந்திப்பை நடத்தும் சிறீதரன் அவர்களின் குறளி வித்தைகள்
சிறிலங்காவின் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் டிசம்பர் 03 ஆரம்பமாகியிருந்த நிலையில், சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறீதரன் அவர்கள் தமிழர்களது சுயநிர்ணய உரித்துகள் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகுமானால், நாங்கள் உங்களோடு இணைப் பங்காளர்களாகப் பயணிக்கத் தயாராக இருக்கின்றோம் என்று கூறியுள்ளதை தமிழர்கள் கடந்து செல்ல முடியாது இப்படியான முறையற்ற பதிவுகள் வெறும் வசங்கள் என்று நாங்கள் கடந்து செல்வோமாக இருந்தால் அது இப்படியான நரிகளுக்கு மேலும் தமிழினத்தை சிதைக்கும் என்பதே உண்மை
தமிழினத்தை திட்டமிட்டு இனவழிப்பு செய்த ஜே.வி.பிக்கு வெள்ளையடிக்கும் முயற்சியில் சிறீதரன் மும்முரமாக ஈடுபடத்தொடங்கியுள்ளார்
இதற்க்கு முன்பு கடந்த காலத்தில் சுமந்திரன் என்கின்ற சிங்கள அடிவருடியை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கள் அவர்களுடன் ஒப்பிட்டதிலிருந்தே தனது சிங்கள விசுவாசத்தை வெளிப்படையாக காட்டியிருந்த சிறீதரன் 2009 போரின் இறுதிக்காலத்தில் வவுனியாவில் சென்று பதுங்கிக்கொண்டு போர்ஓய்வின் பின்னர் மக்களிடையே உணர்ச்சிவசமாக பேசி கடந்த காலங்களில் தேர்தல்களில் வென்று சிங்கள அரசு போடும் எலும்புத்துண்டுக்கு மறைமுகமாக உழைத்து வந்திருந்தார் என்பதை மக்கள் அறிவார்.
அதே போன்று இம்முறை ஏற்ப்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் விளைவாக சிங்கள பேரினவாதி அனுராவின் மறைமுக ஆசியுடன் சிங்கள பேரினவாத அரசிற்கு வெள்ளையடிக்கும் வேலையை தொடங்கியுள்ள
சிறீதரன் என்கின்ற புல்லுருவியை தமிழ் மக்கள் மிகத்தெளிவான பாடத்தை புகட்ட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக இருக்கிறது.