
எங்களுடன் கல்விகற்று, விளையாடிய எமது நண்பர்கள் புவியழகன்,பரந்தாமன்,நிசாந்தன் ஞாபகார்த்தமாக எமது வித்தியா நண்பர்களால் நடாத்தப்பட்டிருந்த மென்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா மாவட்டங்களை சேர்ந்த பல தலைசிறந்த கழகங்கள் , வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்..
பங்குபற்றிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியருந்தனர் முல்லை சலஞ்சர்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் மல்லாகம் ஸ்டார் அணியினர்… விறுவிறுப்பாக நடைபெற்றிருந்த இந்தபோட்டியில் இறுதிப்பந்திலே வெற்றியினை தமதாக்கிக்கொண்டு ரூபா 50,000/- பணப்பரிசினையும் வெற்றிக்கிண்ணத்தினையும் பெற்றிருந்தனர் யாழ் மல்லாகம் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினர்.இரண்டாமிடத்திற்காக ரூபா 30,000/- பணப்பரிசினையும் கிண்ணத்தினையும் பெற்றுக்கொண்டனர் முல்லை சலஞ்சர்ஸ் அணியினர்.இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மல்லாகம் ஸ்டார் அணியின் கஜமுகன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
போட்டி தொடரின் சிறந்த வீரராக மல்லாகம் ஸ்டார் அணியின் கஜமுகன் அவர்களும் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக வித்தியா அணியின் சுஜிபவன் அவர்களும் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக முல்லை சலஞ்சர்ஸ் அணியின் சதுர்ஜனன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர் .
இந்த சுற்றுப்போட்டிக்கான அனுசரணையை வழங்கியிருந்த எமது கழக புலம்பெயர் உறுப்பினர்களான பிரசாத்(கண்ணன்),கிருந்தன்,ரேகன்,ரமாளன்,டெனோஜன்,லவன்,தினேஸ் ஆகியோருக்கு கழகம் சார்பான மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.