Skip to content
Juni 7, 2025
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Linkedin
  • Whatsapp
eelam 2

ஈழத்தமிழர்களின் செய்தித்தளம்

Primary Menu
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • தாயக செய்திகள்
  • உலக செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • இந்திய செய்திகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
  • யேர்மன்-செய்திகள்
  • திரைப்பக்கம்
  • விளையாட்டு
  • கவிதைகள்
Watch
  • Home
  • 2025
  • Februar
  • 18
  • 2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு – செலவுத் திட்டம்
  • இலங்கைசெய்திகள்

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு – செலவுத் திட்டம்

ஈழத்தமிழன் Februar 18, 2025
parli

2025 ஆம் ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சியை அடைவது பிரதான இலக்காகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தான் இம்முறை வரவு – செலவுத் திட்டம்  தயாரிக்கப்பட்டுள்ளது.

அரச நிதி முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய துறைகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு.

மீண்டெழும் செலவுகளுக்கு 4% நிதி ஒதுக்கீடு.

மக்களுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவும் மக்களுக்கு பயனுடையதாக இருக்க வேண்டும்.

கைத்தொழில், வர்த்தகம், மற்றும் உற்பத்தித் துறையில் அதிகளவான  மேம்பாட்டை எதிர்பார்க்கிறோம்.

பொருள் மற்றும் சேவை நியாயமான விலைக்கு தடையின்றி விநியோகிக்கப்படும்.

கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு.

மக்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பொருள் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதி ஊடாக 19 பில்லியன் டொலர் வருவாயை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு.

2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு அரசமுறை கடன்களை முறையாக செலுத்துவோம்.

ஏழ்மையை இல்லாதொழிப்பதற்கு உரிய திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

அரச – தனியார் கூட்டு ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழல் அபிவிருத்தி செய்யப்படும்

பொருளாதார பரிமாற்ற சட்டம் திருத்தம் செய்யப்படும்

தரிசு நிலங்களாக உள்ள அரச காணிகள் குத்தகை அடிப்படையில் தனியார் தரப்பினருக்கு வழங்கப்படும்

அரச – தனியார் பங்குடைமை தொடர்பில் புதிய சட்டமூலம் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும்

காணிகளின் உச்ச பயனை பெற “பிம்சவிய” திட்டம் அமுல்படுத்தப்படும்

சட்டவரைபாக காணப்படும் வங்குரோத்து தொடர்பான வரைபு  வெகுவிரைவில் சட்டமாக்கப்படும்

தேசிய தரவு கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்

கொழும்பு துறைமுக முனையங்கள் அபிவிருத்திக்கான திட்ட மனுக்கள் எதிர்வரும் நாட்களில்  கோரப்படும்

சகல பிரஜைகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டம் துரிதப்படுத்தப்படும்.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் டொலராக அதிகரிக்க எதிர்பார்ப்பு.

டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தி துரிதப்படுத்தலுக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக புதிய சுற்றுலாத்தலங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

ஜப்பான் நாட்டு முதலீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் நிர்மாணிக்கப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதி இல்லை. வாகனம் இல்லை.

சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை மேம்பாட்டுக்காக நடப்பு வங்கி கட்டமைப்புடன் அபிவிருத்தி வங்கி ஸ்தாபிக்கப்படும்.

அரச செலவுகள் கட்டம் கட்டமாக குறைக்கப்படும்.

சுங்க சட்டம் திருத்தம் செய்யப்படும்.

அதிக பராமரிப்பு செலவுகளை கொண்டுள்ள சகல அதிசொகுசு அரச வாகனங்கள் எதிர்வரும் மாதம் ஏலத்தில் விடப்படும்.

கொள்கை அடிப்படையில் அரச நிறுவனங்கள் கூட்டிணைக்கப்படும்.

அரச முயற்சியாண்மைக்கான பரிபாலன சபை ஸ்தாபிக்கப்படும்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனை உணவு வழங்கலுக்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

திரிபோசா வழங்கல் சேவைக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மகளிர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டலுக்காக 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

சுகாதார சேவை டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக அதிக நிதி ஒதுக்கீடு.

தோட்ட வைத்தியசாலைகளுக்கான மனித மற்றும் பெளதீக வளங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும்.

சுகாதாரத்துறைக்கு 706 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்துக்கு 185 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : மருந்து தட்டுப்பாடு ஏற்படாது.

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பராமரிப்பது தொடர்பில் பயிற்சியளிப்பதற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாவும் பல்கலைக்கழக உட்கட்டமைப்புக்காக 135 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு.

முன்பிள்ளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 100 ரூபாவாக அதிகரிப்பு. இதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

தெரிவு செய்யப்பட்ட முன்பிள்ளை பாடசாலை அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 1000 ரூபாவாக அதிகரிப்பு.

ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் அதிசித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் 750 ரூபா புலமைப் பரிசில் கொடுப்பனவு 1000 ரூபாவாக அதிகரிப்பு.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு 7500 ரூபாவாகவும், மாணவர் கொடுப்பனவு 6500 ரூபாவாகவும் அதிகரிப்பு. இதற்காக 4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

தேர்தலுக்காகவே யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது :யாழ். நூலக அபிவிருத்திக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஏனைய பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வடக்கு மாகாணத்தில் தெங்கு பயிர்ச்செய்கைக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்துக்காக 232.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

அஸ்வெசும நலன்புரித்திட்டத்தில் புதிதாக 2,80000 பயனாளர்களை இணைத்துக்கொள்ள  எதிர்பார்ப்பு.

நீரிழிவு நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாவாகவும், வயோதிபர்களுக்கான கொடுப்பனவு 5,000 ரூபாவாகவும் அதிகரிப்பு.

சிறைச்சாலை, சிறுவர்  நன்னடத்தை மத்திய நிலையங்களில் உள்ள சிறுவர்களின் நலன்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

சிறைச்சாலையில் இருந்து வெளியேறும் சிறுவர்களின் நலன் கருதி விசேட திட்டங்கள்.

சிறுவர் மற்றும் இளைஞர் உளவியல் பிரச்சினையானது சமூக பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு தீர்வுகாணும் திட்டங்களை அமுல்படுத்த 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும். நிவாரண பொதி வழங்கப்படும். இதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

கிராமிய வீதி அபிவிருத்திக்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

கழிவு முகாமைத்துவ வசதிகளுக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

யானை – மனித மோதலை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

அரச சேவையாளர்களின் சம்பளம் 15, 500 ரூபாவால் அதிகரிப்பு.

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்துக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வடக்கு – கிழக்கு மீள்குடியேற்றம் மற்றும் வீட்டு நிர்மாணிப்புக்கு 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

ஊடகவியலாளர்கள் மற்றும் கலைத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு கொட்டாவ பகுதியில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பு.

இலங்கையர் தினம் என்ற பெயரில் தேசிய நிகழ்வு கொண்டாடப்படும்.

அரசியல் பரிந்துரைகளுடன் அரச நியமனம் மற்றும் அரச தொழில்வாய்ப்புக்கள் இனி இல்லை.

தனியார் துறையினரின் 21 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆயிரம் ரூபாவாகவும், 2026 ஜனவரி மாதம் 30 ஆயிரமாகவும் அதிகரிக்க தனியார் தரப்பின் சேவை வழங்கல் சங்கம் இணக்கம்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளம் மீள்பரிசீலிக்கப்படும்.

தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 4,268 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 2,650 மில்லியன்  ரூபா ஒதுக்கீடு.

புதிதாக வரிகள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை.தி ருத்தங்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன.

நாட்டு மக்களை இனி இன,மத,மொழி என்ற அடிப்படையில் பிளவுபடுத்த முடியாது. வரவு செலவுத்திட்டத்தின் உள்ளடக்கம் முறையாக செயற்படுத்தப்படும்.

வரவு – செலவு திட்டத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய திறைசேரியின் செயலாளர் உட்பட சகல அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை நிறைவு செய்தார்.

2025 வரவு – செலவுத்திட்டம் :

மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் – ரூ.4,990 பில்லியன் 

மொத்த செலவீனம் – ரூ.7,190 பில்லியன்.

துண்டுவிழும் தொனை – ரூ.2,200 பில்லியன்.

2025 ஆம் ஆண்டுக்கான 79 ஆவது வரவு – செலவுத்திட்டத்தின் ஜனாதிபதியின் முழுமையான உரையை மும்மொழிகளிலும் பார்வையிட – 

https://cdn.virakesari.lk/uploads/medium/file/275690/Budget_Speech_2025_Final.pdf

Continue Reading

Previous: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்
Next: யாழ் – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Related Stories

pillaiya
  • இலங்கைசெய்திகள்

பிள்ளையானின் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி

ஈழத்தமிழன் Juni 4, 2025
ministry
  • இலங்கைசெய்திகள்

இலங்கையில் 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

ஈழத்தமிழன் Mai 31, 2025
malai
  • இலங்கைசெய்திகள்

நாட்டில் சீரற்ற வானிலையால் 8,000 பேர் பாதிப்பு.

ஈழத்தமிழன் Mai 31, 2025

நிகழ்வுகள்

anura german
  • நிகழ்வுகள்
  • யேர்மன்-செய்திகள்

யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!!

ஈழத்தமிழன் Mai 30, 2025
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025 swiss mulli

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

Mai 21, 2025
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான தமிழர்கள் . london

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான தமிழர்கள் .

Mai 18, 2025

துயர் பகிர்தல்

kirusanthi
  • துயர் பகிர்தல்

யாழ் மாணவி கிருசாந்தி குமாராசுவாமி கொலையாளிகள் மனு நிராகரிப்பு

ஈழத்தமிழன் Juni 3, 2025
பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு (யாழ். இந்திய துணைத்தூதரக 501135264_1254823329978975_998410297092714557_n

பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு (யாழ். இந்திய துணைத்தூதரக

Mai 29, 2025
செல்வச்சந்திரன் சின்னத்துரை selvacanthiran.s-thuyar

செல்வச்சந்திரன் சின்னத்துரை

Mai 22, 2025

உலக செய்திகள்

tamil
  • உலக செய்திகள்

அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களுக்கும்.

ஈழத்தமிழன் Juni 5, 2025
கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ – அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்பு World_renu_canada-wildfires

கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ – அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்பு

Juni 5, 2025
டிரம்ப் அதிரடி: 12 நாடுகளின் மக்களுக்கு அமெரிக்கா செல்ல தடை! ra

டிரம்ப் அதிரடி: 12 நாடுகளின் மக்களுக்கு அமெரிக்கா செல்ல தடை!

Juni 5, 2025

திரைப்பக்கம்

Cinema_tharshi_rr
  • திரைப்பக்கம்

‹ஜெயிலர் 2› படப்பிடிப்பில் நடந்தது என்ன ?

ஈழத்தமிழன் Juni 2, 2025
பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி Zee தமிழில் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார், புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள்

பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி Zee தமிழில் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்,

Mai 25, 2025
கூத்து கலையில் சினிமா படம் சர்வதேச விருது பெற்ற புலம் பெயர் தமிழன் செல்வின் தாஸ். q

கூத்து கலையில் சினிமா படம் சர்வதேச விருது பெற்ற புலம் பெயர் தமிழன் செல்வின் தாஸ்.

Mai 23, 2025

நினைவில்

po sivakumar 05.06
  • தாயக செய்திகள்
  • நினைவில்

யாழில் பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவுதினம்

ஈழத்தமிழன் Juni 5, 2025
கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி மீது தாக்குதல்!! canada thupi

கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி மீது தாக்குதல்!!

Mai 28, 2025
கனடா – டொரண்டோவில் புதிய இனப்படுகொலை நினைவு தூபி : வெளியான அறிவிப்பு canada thupi

கனடா – டொரண்டோவில் புதிய இனப்படுகொலை நினைவு தூபி : வெளியான அறிவிப்பு

Mai 24, 2025

ஆக்கங்கள்

495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

ஈழத்தமிழன் Mai 4, 2025
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025

விளையாட்டு

Champions league
  • விளையாட்டு

சம்பியன் லீக் முதல் முதல் வென்றது பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன்

ஈழத்தமிழன் Juni 2, 2025
சுவிஸில் கால்பந்தாட்டத்தில் ஈழத்தமிழனின் சாதனை aswin

சுவிஸில் கால்பந்தாட்டத்தில் ஈழத்தமிழனின் சாதனை

Mai 30, 2025
பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025 WhatsApp Image 2025-05-26 at 01.16.31_6644a1ee

பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025

Mai 26, 2025

மருத்துவம்

chichen
  • மருத்துவம்

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

ஈழத்தமிழன் März 17, 2025
இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள் th

இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள்

Januar 7, 2025
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு! Cancer Vaccine (1)

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு!

Dezember 19, 2024

You may have missed

semmani
  • தாயக செய்திகள்

செம்மணி மனிதப் புதைக்குழியில் கொன்று புதைக்கப்பட்ட 600 பொதுமக்கள்

ஈழத்தமிழன் Juni 7, 2025
apthu
  • தாயக செய்திகள்

மட்டு’வில் இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு

ஈழத்தமிழன் Juni 7, 2025
Kajendrakumar
  • தாயக செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் பத்து சபைகளை கைப்பற்றுவோம் – கஜேந்திரகுமார்

ஈழத்தமிழன் Juni 7, 2025
1210535408
  • தாயக செய்திகள்

யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக மகேசன் நியமனம்!

ஈழத்தமிழன் Juni 6, 2025

திரைப்பக்கம்

‹ஜெயிலர் 2› படப்பிடிப்பில் நடந்தது என்ன ? Cinema_tharshi_rr

‹ஜெயிலர் 2› படப்பிடிப்பில் நடந்தது என்ன ?

Juni 2, 2025
பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி Zee தமிழில் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார், புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள்

பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி Zee தமிழில் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்,

Mai 25, 2025
கூத்து கலையில் சினிமா படம் சர்வதேச விருது பெற்ற புலம் பெயர் தமிழன் செல்வின் தாஸ். q

கூத்து கலையில் சினிமா படம் சர்வதேச விருது பெற்ற புலம் பெயர் தமிழன் செல்வின் தாஸ்.

Mai 23, 2025
திருகோணமலையில் உருவாகி வரும் “Red Wattled” திரைப்படத்தின் படப்பிடிப்பு ! Die Grundlagen (1)

திருகோணமலையில் உருவாகி வரும் “Red Wattled” திரைப்படத்தின் படப்பிடிப்பு !

Mai 21, 2025
நெதர்லாந்தில் நாளைய மாற்றம்..1.06.2025 ஞாயிறு மாலை 15.15 pm. Die Grundlagen (1)

நெதர்லாந்தில் நாளைய மாற்றம்..1.06.2025 ஞாயிறு மாலை 15.15 pm.

Mai 21, 2025
யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது 496178054_1261952985940723_2512337484121618686_n

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது

Mai 7, 2025
Februar 2025
M D M D F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
« Jan   Mrz »
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.