
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் வாக்காளர் இடாப்பு திருத்தப்படுகின்றது.
வழமையாக கிராம அலுவலர் வீடு வீடாக சென்று வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான விபரங்களை சேகரிப்பர்.
எனினும் இம்முறை அவ்வாறு நடைபெறாது.
எனவே உங்கள் வீட்டில்
- 2025-01-31 இற்கு 18 வயதை பூர்த்தியடைந்த ஒருவர் வாக்காளராக பதிவு செய்யப்படாது இருப்பின்
- 18 வயதை தாண்டிய ஒருவர் புதிதாக உங்கள் வீட்டிற்கு (திருமணம், அல்லது வேறு காரணத்தால் ) வசிக்க வந்திருப்பின்
- கடந்த ஒரு வருடத்தில் வாக்காளர் ஒருவர் இறந்திருப்பின் அல்லது வசிப்பிடத்தை விட்டு சென்றிருப்பின்
அவசரமாக உங்கள் பிரதேச கிராம அலுவலரை சந்தித்து அந்த விபரங்களை பதிவு செய்யவும்.
அதேபோல் 2024 இல் நடைபெற்ற தேர்தல்களில் உங்களுக்கு கிடைத்த வாக்காளர் அட்டையில்
- உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் பிழையாக அச்சிடப்பட்டிருந்தால்
- உங்கள் வீட்டில் (இறந்ததால் அல்லது வசிப்பிடத்தை விட்டுச்சென்றதால்) வசிக்காத ஒருவருக்கு வாக்காளர் அட்டை கிடைத்திருப்பின்
அது தொடர்பிலும் உடனடியாக உங்கள் பிரதேச கிராம அலுவரை சந்தித்து விபரஙகளை அளிக்கவும்