
மக்கள் பேரவைக்கான இயக்கமானது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கையினை முன் வைத்து நாடு பூராகவும் கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று 06.03.2025 மாலை மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் ஆரயம்பதி பகுதிகளில் மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டளர்கள்
மத தலைவர்கள்
அரசு சாரா தொண்டு நிறுவணங்களின் உத்தியோகத்தர்கள் என பெரும்பாளானவர்கள் கலந்து கொண்டனர்.
தற்போதைய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வரும் முன் மேற்படி சட்டம் தொடர்பில் கடுமையான விமர்சணங்களை முன் வைத்ததோடு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக பயங்கரவாத தடைச்சட் டம் நீக்கப்படும் என வாக்குறுதி வழங்கியிரு ந்தனார் .ஆனால் ஆட்சிக்கு வந்து இவ்வளவு காலம் கடந்தும் பயங்கர வாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை.
அத்துடன் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும் வழமையான கைதுகளும் இச் சட்டத்தின் மூலம் தெடர்ந்து நடைபெறுகி றத என மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட சிவில் சமூக செயற்பாட்டாளரான ச.சிவயோகநாதன் அவர்கள் குறிப்பிட்டர்.