
பெண்கள்
வீட்டின் கண்கள்,
பெண்கள்
நாட்டின் கண்கள்.
ராணி சாய்ந்துவிட்டால்
ராஜாவுக்கு மதிப்பில்லை,
சதுரங்கமாக இருந்தாலும்…
குடும்பமாக இருந்தாலும்.
படிக்கத் தெரியாத ஆணிடம்
கிடைக்கக் கூடாத புத்தகம்
«பெண்»
கழுத்தில்
தாலி ஏறும்வரை..
யாரென்று
தெரியாத ஒருவனுடன்…
வாழ்க்கைப்
பயணத்தைத் தொடங்கும்…
பெண்களைவிடவா
தன்னம்பிக்கைக்கு
நல்ல உதாரணம்
இருக்கப் போகிறது..!
பெண்கள்…
மகிழ்ச்சியோடு
இருப்பதில்தான்,
ஒட்டுமொத்த
குடும்பத்தின்
மகிழ்ச்சியே
அடங்கி இருக்கிறது.
வாழ்வின்
இசை என்பதே…
பெண்களின்
சிரிப்பில்தான்
புதைந்து கிடக்கிறது.
மகளிர் தின வாழ்த்துகள்.
வாழ்த்தி மகிழும்..
ச.சிவயோகநாதன்