
கொழும்பு – கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது. 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் தற்போது முன்னெடுத்துள்ளனர்.