
கனடா சென்ற ஈழத் தமிழன் குடியுரிமை பெற்று அமைச்சராக முடிகிறது. தமிழ்நாடு சென்ற ஈழத் தமிழன் 42 வருடமாக ஏன் குடியுரிமை பெற முடியவில்லை என்று கேட்டால்,
குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கிறது. எனவே மத்திய அரசியம் கேளுங்கள் என்று திமுக வினர் கூறுகின்றனர்.
சரி. குடியுரிமை வழங்குவது மத்திய அரசின் அதிகாரம் என்றால் ஏன் நீங்கள் ஈழத் தமிழருக்கு குடியுரிமை பெற்றுக் கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள்?
ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகின்றன. ஈழத் தமிழருக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்க நீங்கள் செய்த முயற்சிகள் என்ன என்று கேட்டால்,
மத்தியில் சங்கிகளின் ஆட்சி இருக்கிறது. அவர்களிடம் பெற முடியவில்லை என்கின்றனர்.
சரி. நீங்கள் மத்தியில் கூட்டணி அரசில் அமைச்சர்களாக இருந்தபோது ஏன் பெற்றுக்கொடுக்கவில்லை என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை.
மாறாக, ராஜிவைக் கொன்றதுபோல் கனடா பிரதமரைக் கொன்று பாருங்கள். அப்பபுறம் தெரியும் என்று எகத்தாளமாக பதில் தருகின்றனர்.
முதலாவது, கனடா பிரதமர் அமைதிப் படை என்று வந்து பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழரை கொல்லவில்லை.
இரண்டாவது, கனடா பிரதமரைக் கொன்றால் கொன்றவர்களை தண்டிப்பார்களேயொழிய அதற்காக ஒரு இனத்தை தண்டிக்க மாட்டார்கள்.
அதைவிட, ஈழ அகதிகள் 1983முதல் இருக்கின்றனர். ராஜிவ் 1991ல் கொல்லப்படுகின்றார். அப்படியென்றால் 1991க்கு முன்னர்வரை குடியுரிமை வழங்கப்பட்டதா? இல்லையே.
அத்துடன் பாகிஸ்தானில் இருந்துவந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் ஈழ அகதிகள் இந்துக்களாக இருந்தும் குடியுரிமை வழங்கப்படவில்லை.
எனவே இந்தியாவில் ஈழ அகதிகளுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்படாமைக்கு ராஜிவ் கொலை காரணம் அல்ல. மாறாக ஈழத் தமிழர் “தமிழ் இனம்”என்பதே உண்மை காரணம்.
தமிழர் இதை உணராமல் மறைப்பதற்கே ஆரியமும் திராவிடமும் ராஜீவ் கொலையை தொடர்ந்து கூறி வருகிறது.
Alle Reaktionen:
22