
பேங்கொக்கில் அவசரகால நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் பங்குச் சந்தை வர்த்தகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பேங்கொக்கில் நிலநடுக்கம் காரணமாக இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள் 50க்கும் அதிகமானவர்கள் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேங்கொக்கின் சட்டுசாச் பாக்கில் இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள்ளேயே இவர்கள் சிக்குண்டுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர் 43 பேர் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.