
முல்லைத்தீவில் (Mullaitivu) பெண்ணொருவர் மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை சற்றுமுன்னர் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் பெண்ணொருவர் கொடூமாக தாக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது.
தனிப்பட்ட தகராறு காரணமாக நடுவீதியில் குறித்த பெண் மீது நபரொருவர் சரமாரி தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.
இதையடுத்து, குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் தாக்கிய நபரை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒட்டுசுட்டான் காவல் நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டிருந்தனர்.
இதன்பின், சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு (Thurairasa Ravikaran) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு விரைந்த துரைராசா ரவிகரன், தாக்குதல் மேற்கொண்டிருந்த நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் அவரை கைது செய்ய கோரி முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
இதையடுத்து, தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.