
யேர்மனி மண் சஞ்சிகையின் 35 ஆவது ஆண்டு நிறைவு விழா (05. 04. 2025)
டிஸ்பேர்க் நகரில ; வெகு சிறப்பாக நடை பெற்றது .
மண் சஞ்சிகையானது கல்வி,
கலை , கலாசாரம் , சமூக மேம்பாட்டுப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு
வருகின்றது. ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த தமிழ்ப்பிள்ளைகள் பட்டிமன்ற நிகழ்வை
நடாத்தி அனைவரதும் பாராட்டைப் பெற்றுக் கொண்டனர்.
ஏனைய கலை நிகழ்வுகளும் அவையோர் கண்களுக்கு பெரு விருந்தளித்தன .
மண் சஞ்சிகை ஆசிரியர் திரு. சிவராஜா அவர்களின் காத்திரமான தொடர்ச்சியான
எழுத்து , கலை மற்றும் மானிட நேயப் பணிகள் புலம்பெயர்ந்த தேசத்தில்
தமிழைத் தொடர்ச்சியான உயிர்ப்பு மொழியாக தக்க வைத்துக் கொள்வதிலும்
தாயத்தில் பல அறப் பணிகளை முன்னெடுக்கவும் உறுதுணையாக இருந்து
வருகின்றமை பாராட்டுதற்குரியது. புலம் பெயர் தமிழ் இலக்கியப் பெருவெளியில்
மண் சஞ்சிகை காத்திரமான ஒளி விளக்காக வரலாறுகளில் பதிவு செய்யப்படும்.
பல்கலைக்கழக ஆய்வியல் மாணவர்கள ; தங்கள் பட்ட ஆய்வுக்கான விடயப்
பரப்பை மண் சஞ்சிகைக்குள் உட்படுத்தும் போது புலம் பெயர் தேசத்தில் தமிழ்
மொழியின் பிரயோகம் தொடர்பாக பல உணர்ச்சிகரமான பெறுபேறுகளைக் கண்டு
கொள்ள முடியும் என நம்புகிறேன ;.
அதே வேளை எதிர்கால சவால்கள ; தொடர்பாக
பல அனுமானங்களை ஆய்வு ரீதியாகவும் முன்வைக் முடியும் . சஞ்சிகை ஆசிரியர்
திரு சிவராஜா அவர்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். அவர் வாழும் போதே
பாராட்டப் பட வேண்டியவர். சஞ்சிகை ஆசிரியர் ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்து
தொடர்ந்து மானிடப் பணிகளில் ஈடுபட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நட்புடன்!.. அருந்தவராஜா.க -தலைவர் -சுவிற்சர்லாந்து கலை இலக்கியப் பேரவை
புலம்பெயர்ந்து மண் தாகம் கொண்டு தவித்த போது, அமிர்தவர்சினியாய்த் தாகம்
தீர்த்தது மண் ! இச ; சஞ்சிகை என்னை மட்டுமல்ல என் பிள்ளைகளும் தம்
சிந்தனைகளைச் சிதறவிட ஆக்கமும் ஊக்கமும் தந்து நின்றது.
இந்தச் சஞ்சிகை காலத்தின் தாக்கங்கள் எல்லாம் தாண்டி இன்று தனது 35 வது ஆண்டின் நிறைவை
இன்பமுடன் கொண்டாடி மகிழ்கின்றது. தான் மகிழ்வதோடு தன்னோடு பயணித்த
அத்தனை எழுத்தாளரையும் பங்காளரையும் வாழ்த்திப் பாராட்டி மகிழ்ந்த தருணம்
இது! நாமும் திரு திருமதி ,சிவராஜா அவர்களுடன் மகிழ்ந்த வேளையின் பதிவுகள்
சில!
கீதா பரமானந்தன் – எழுத்தாளர் – யேர்மனி
மண் சஞ்சிகை தனது 35 ஆவது நிறைவை மிக சிறப்பாக ஜேர்மனியில்
கொண்டாடியது. சஞ்சிகையின் ஆசிரியரும் அதன் தலைவருமாகிய வை சிவராஜா
ஐயாவுக்கும் , வாசகர்களுக்கும் எனது பாராட்டுகள்.
வடகிழக்கு பகுதி எங்கும் 35 வருடமாக பல்வேறு உதவிகளை மண் சஞ்சிகை
செய்து வருகிறது. வாழ்வாதார உதவிகள், குடிநீர் வசதிகள் , பாடசாலை
மாணவர்களுக்கான உதவிகள், அனர்த்தங்களின் போது அவசர உதவிகள ; என
எண்ணிலடங்கா சேவைகளையாற்றிவரும் மண் சஞ்சிகையுடன் நானும் பதினொரு
வருடமாக இணைந்து அவர்களின் உதவியினை பெற்று எம் மக்களுக்கு
வழங்கிவருதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வே பிரபாகரன் -வாசம ; உதவும் கரங்கள் அமைப்பு – மட்டக்களப்பு.
மண் சஞ்சிகையின் 35 வது ஆண்டுவிழா 05.04.25 அன்று சிறப்பாக
நடைபெற்றது.முத்தமிழும ; விரவி எழுந்தவிழாவாக அமைந்திருந்தது. ஆசிரியர் திரு
சிவராசா அவர்களின் விடாமுயற்சியில ; 35 ஆண்டுகள் இலக்கியப்பணி,
மனிதநேயப்பணியென விரைந்த பகுதிகளை காண முடிந்தது.
மண் சஞ்சிகை, எழுத்தாளர்கள் அனைவரையும் 35 வது விழாவில ; கௌரவித்தமை
மகிழ்வைத் தந்தது. 1990 இல் இருந்து இன்றுவரை மண்ணுடன் இணைந்து
பயணித்ததையும் நினைத்துப் பார்க்கையில் காலச்சுவட்டின் கடுகதிவேகப் பயணம்
ஞாலத்தில் ஒரு வரலாறைப் பதித்துச் சென்றது. ஆசிரியர் சிவராசா அவர்களின்
அரிய பணியை நாமும் வாழ்த்துகிறோம்.
நன்றியுடன் நகுலா சிவநாதன் -எழுத்தாளர் – யேர்மனி
புலம் பெயர்ந்த மண்ணில் முப்பதைந்து வருடங்களாய் அன்னையின் மடியில்
விழுந்த துளி மழையாய், காலத்தின் கரையில் கிடந்த ஓர் அரிய முத ;தாய்,
இடையறாத உழைப்பின் திரளாய் தவறாமல் கிடைக்கின்றது எம் கையில்
ஆசிரியர் திரு. சிவராசா அவர்களின் «மண் சஞ்சிகை»! விதைத்த சொல்லின்
வேரில ; எழுத்தாளர்களின் எண்ணங்கள் பூத்துக் குலுங்க, இலக்கியத்தின் இன்பம்
பழுத்து நிற்க, எழுத்துகள் தேனாய் சொட்டச் சொட்ட, கவிதைகள் தீஞ்சுவையாய்
மனதில் சுவைக்க ஓர் அழியாச் சுடராய் கட்டியம் கூறியபடி தவறாமல்
கிடைக்கின்றது எம் கையில் ஆசிரியர் திரு. சிவராசா அவர்களின் «மண்
சஞ்சிகை»! காலத்தின் கண்ணாடியில் தமிழின் முகத்தை விளக்கும் ஓர் அறிவுக்
கதிரவனாய், இனிமையின் இமயமாய், வாசகர்களின் இதயத்தில் ஓர் அழியா
நூலகம் கட்டிய இலக்கியமாய் தவறாமல் கிடைக்கின்றது எம் கையில் ஆசிரியர்
திரு. சிவராசா அவர்களின் «மண் சஞ்சிகை»!காலத்தின் தேவைக்கேற்பச் சிந்தனை
வானில் பறக்கும் கற்பனையின் பறவையாய், மூச்சில் ஒன்றாய் கலக்கும் காவியக்
காதலின் காற்றாய் உணர்வுகளின் மேகங்களில் தோன்றும ; இலக்கிய
வடிவங்களாய், எல்லோரையும் வாசிக்கத் தூண்டும் ஓர் கலையரசியாய் தவறாமல்
கிடைக்கின்றது எம் கையில் ஆசிரியர் திரு. சிவராசா அவர்களின் «மண்
சஞ்சிகை»! இயந்திர வாழ்வின் சிறையில் மனம் வாடும் இக்காலத்தில், தமிழின்
மணம் கமழ, எழுத்தின் எழிலாய் முத்துக்களால ; தொடுக்கப்பட்ட ஓர் அழகின்
மாலையாய், சொல ;லின் சுகமாய் தவறாமல் கிடைக்கின்றது எம் கையில்
ஆசிரியர்திரு. சிவராசா அவர்களின் «மண் சஞ்சிகை»!»தமிழ் இனி மெல்லச்
சாகும்»எனும் சபிப்போரின் குரலை முடக்கி, அவர்கள் நாக்கில் சம்மட்டியால்
அடித்து, «எம் தமிழ் என்றும் அழியாது!»எனும ; எச்சரிக்கையாய் எமக்குள்
நடைபோடும் இந்த «மண் சஞ்சிகை» என்றும ; வாழ்க! எதிர்காலத்தின்
முன்னுரையாக இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தமிழின் சுடராய் ஒளிர்வாய்! புதிய
தலைமுறைகளுக்கு அறிவின் விளக்காய் மிளிர்வாய்! உன் பயணம் தொடர
என்றும ; எமது இதயங்களில் வாழ்த்துகளை மலர்களாய் வாரி வழங்குகிறோம்!
நீங்கள் அளித்த»முத்தமிழ் விருதுக்கு» திரு திருமதி மண் சஞ்சிகை ஜேர்மனி
சிவராசா அவர்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்.. வாழ்க தமிழ்! வளர்க
பணி! என்றென்றும ; நட்புடன்..
சிபோ சிவகுமாரன் – திரைப்பட இயக்குனர் – யேர்மனி
தமிழர் இலக்கியப்பரப்பில ; எந்தநாட்டிலும் மண்சஞ்சிகை போன்று› பற்பல
பதிவுகளைத் தாங்கி இதுவரை வேறு சஞ்சிகைகள் வெளி வரவில்லை இதுகல்வி,கலை, கலாசாரம், இலக்கியம்,,இலக்கணம் ,சமூகம்,பரோபகாரம ; அறம்
போன்றனவற்றை தாங்கி ஆண்டு 36ல் கால் பதித்துள ;ளது பாராட்டுக்குரியது..
சுவிஸிலிருந்து எழுத்தாளர் பொலிகை ஜெயா.
மண் சஞ்சிகையின் 35வது ஆண்டு நிறைவு விழா ஜெர்மனியில ; கடந்த 35
ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கும் «,மண் » கல்வி கலை இலக்கிய
சமூக சஞ்சிகையின் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது பாராட்டுக்குரிய
விடயமாகும்.. 35 ஆண்டாக இந்த மண் சஞ்சிகை நடத்தி வந்ததற்கு வைரமுத்து
குடும்ப சார்பாக நன்றி கலந்த பாராட்டுக்கள். , 35 வருடங்களுக்கு மேலாக இதை
நடத்துவதற்கு இவ்வளவு அர்ப்பணிப்பும் தியாகமும் செய்திருக்க வேண்டும் ;. இவை
எல்லாவற்றையும் சாதித்து வெற்றி நடை போடுகிறது மண் சஞ்சிகை இது
அவருக்கு மட்டுமல்ல வைரமுத்து குடும்பத்துக்கும ; எமது சொந்தங்களுக்கும் ஏன்
எமது ஊருக்கும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமை தான் மகிழ்ச்சி…
சமூக செயற்பாட்டாளர் தி சௌந்தரராசா – (பெறாமகன்) – கனடா
வாழ்த்துக்களும்… விழாபற்றிய விபரங ;களும் தொடரும்…
ஆசிரியர் – மண் சஞ்சிகை – யேர்மனி