Skip to content
Juni 7, 2025
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Linkedin
  • Whatsapp
eelam 2

ஈழத்தமிழர்களின் செய்தித்தளம்

Primary Menu
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • தாயக செய்திகள்
  • உலக செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • இந்திய செய்திகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
  • யேர்மன்-செய்திகள்
  • திரைப்பக்கம்
  • விளையாட்டு
  • கவிதைகள்
Watch
  • Home
  • 2025
  • April
  • 10
  • தமிழீழத் தேசியத்தலைவரின் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு தரணியே தமிழீழத்தில் காத்து கிடந்த நாள்
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசியத்தலைவரின் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு தரணியே தமிழீழத்தில் காத்து கிடந்த நாள்

ஈழத்தமிழன் April 10, 2025
pirapa

தமிழீழத்  தேசியத்தலைவரின் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு தரணியே தமிழீழத்தில் காத்து கிடந்த நாள்!

தமிழீழத்  தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், 10.04.2002 அன்று  கிளிநொச்சியில்  நடாத்திய  சர்வதேச  ஊடகவியலாளர் மாநாடு சர்வதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இம்மாநாட்டில் 700-ற்கும் மேற்பட்ட செய்தியாளர்களை சந்தித்து சுமார் இரண்டரை  மணி  நேரம்  கேள்விகளுக்கான முழுமையான விளக்கமளித்ததோடு,செய்தியாளர்  மாநாட்டை  சிறப்பாக ந நடத்தியிருந்தார். அங்கே  பலதரப்பட்ட  கேள்விகளுக்கும்  அவர்  விரிவான  பதில்களை வழங்கியிருந்ததுடன் சமாதான முயற்சிகள் பற்றியும் ஊடகவியலாளர் தொடுத்த வினாக்களுக்கு விடையளித்திருந்தார்.

2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர். தமிழர்களின் வரலாற்றில் தமிழினத்தின் தேசியத்தலைவரின் செய்திக்காக,அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலாவதாகும். அதனைவிட,சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டமை இல்லையென்றே சிங்கள ஊடகங்கள் கூட வர்ணித்திருந்தன.இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு நாள் குறித்த பின்னர்,இது நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கையும் சிங்களதேசத்தையும் இணைக்கும் ஏ9 பாதை திறந்துவிடப்பட்டது. தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகும். தமிழீழ விடுதலையின் மூலஇயக்கு சக்தியான தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு ஊடகவியலாளர்களுக்கு பேட்டிகள் வழங்கி இருந்தாலும் 2002 ஏப்ரல் 10ம்நாள்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேசப் பத்திரிகையாளர்கள் அனைவரும் சந்திக்கும் ஒரு பெரும் அழைப்பை விடுத்திருந்தனர்.சர்வதேச ஊடகங்களுக்கும் இது வித்தியாசமான ஒரு அனுபவமாகவே அமைந்திருந்ததென அவர்கள் கருத்துவெளியிட்டிருந்தனர்.

அதுநாள் வரைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைப் பிரகடனமாக,இயங்குநிலை அறிவிப்பாக,உத்தியோகபூர்வ செய்தியாக உலகம் கணித்து வந்தது ஒவ்வொரு மாவீரர் நாளிலும் தேசியத்தலைவரின் குரலில் வெளிவரும் மாவீரர் உரையை மட்டுமே. முதல்முறையாக தமது சந்தேகங்களை தமது கேள்விகளை தேசியத்தலைவரிடம் நேரடியாக கேட்பதற்கு கிடைத்த இந்த சந்தர்ப்பம் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது. இது ஒரு புறம்இருக்க, இந்த சந்திப்பை சிங்களதேசத்தின் ஆளும்தரப்பு அவ்வளவாக மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டதாக இல்லை.தமிழீழத் தேசியத்தலைவரின் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நேரடியாக சிங்களதேசத்தின் தேசிய தொலைக்காட்சியாக கருதப்பட்ட ரூபவாகினியில் நேரடியாக ஒளிபரப்பியே தீரவேண்டிய தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தமும் சிங்களத்துக்கு ஏற்பட்டது. விடுதலைப்புலிகளை சுற்றி மர்மங்களையும் விடைகள் இல்லாத கேள்விகளையும் தொடர்ச்சியாக இருக்கவைப்பதன் மூலமே விடுதலைப்புலிகளை ஒரு பயங்கர சக்தியாக உலகின் கண்களுக்குள் தக்க வைக்கமுடியும் என்பதே சிங்களத்தின் எண்ணம். இத்தகைய மர்மங்கள் நீங்குவதிலோ,உலகின் கேள்விகளுக்கு விடுதலைப்புலிகளின் அதிஉச்சமான தலைவரே நேரடியாக பதில் வழங்குவதோ சிங்கள ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இருக்கவில்லை.ஆனாலும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை,போர் நிறுத்தம்,மற்றும் முக்கியமாக மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்ற நாடகத்தில் இத்தகைய அடுத்த தரப்பினரின் இத்தகைய ஊடக சந்திப்புகளை மறுப்பதோ தடை செய்வதோ முடியாது என்பதால்தான் சிங்களமும் இதற்கு ஒப்புகொள்வதாக சொல்லவேண்டி வந்தது.

ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஒரு அமைப்பு என்ற முறையில் மாறிவரும் உலக நிலைமைகளில் தமது நிலைப்பாட்டை வெளிஉலகத்துக்கு பகிரங்கமாக, அதே நேரம் முடிவுகளை எடுக்கும் ஆற்றல்மிக்க ஒரே சக்தியான தமிழீழத் தேசியத்தலைவரே நேரடியாகச் சொல்வதற்கான சந்தர்ப்பாமாக இதனை கணித்திருந்தார்கள். அதிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடப்பதற்கு சரியாக ஏழு மாதத்துக்கு முன்னர் உலகின் அனைத்து சமநிலைகளையும் ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் பற்றிய கணிப்புகளையும் தலைகீழாக மாற்றிய இரட்டை கோபுரச் சம்பவம் 2001 செப்படம்பர் 11ல் நிகழ்ந்தேறி இருந்தது. (இந்த கேள்வியும் தலைவரின் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது). இராணுவ பல சமநிலையில் ஏறத்தாழ சிங்கள தேசத்துக்கு ஒப்பானதாக விடுதலைப்புலிகள் அந்நேரம் பலத்துடன் இருந்தாலும் செப்டம்பர் 11க்கு பின்னான உலகின் கேள்விகள் வித்தியாசமானதாக இருந்ததால், அதற்கு தேசியத்தலைவர்தான் பதில் அளிப்பது காத்திரமானதாக இருக்கும் என்பதாலும் ஊடகவியலாளர் சந்திப்பு நடாத்தப்பட்டது. இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அதற்கான தேசியத்தலைவரின் பதில்களுக்கும் அப்பால் தேசியத்தலைவர் தன்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளை உள்வாங்கும் முறைமையும் எந்தவொரு கட்டத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு மிகத்தேர்ந்த தலைவனுக்கு உரிய அணுமுறையை கையாண்டதாகவே, ஒரு பழுத்த இராஜதந்திரிக்கே உரிய வார்த்தை பிரயோகங்களை வெளிப்படுத்தியதாகவுமே ஆச்சரியத்துடன் உலக ஊடகங்கள் எழுதின. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி அதில் கலந்துகொண்ட சிங்கள ஊடகவியலாளரான ரஞ்சன் பெரேரா கூறுகையில் “பிரபாகரனின் செய்தியாளர் மாநாடு வரலாறு காணாத நிகழ்வாகும். 300க்கும் மேற்பட்ட உள்நாட்டு-வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மிகுந்த சிரமத்துடன் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாடு மூலம் உலகில் விடுதலைப்புலிகளுக்கு இருந்த முக்கியத்துவத்தை உணரமுடிந்தது. பிரபாகரனை பற்றிய எவ்வளவோ கதைகளும் கற்பனைகளும் பரவி இருந்தவேளையில் செய்தியாளர்கள் மாநாட்டில் மிகச் சாதாரணமாக காட்சியளித்தார். அவரது ஒவ்வொரு சொல்லும் அவரைப் பற்றிய தவறான கருத்துகளை போக்கியது என்ற  சொல்ல வேண்டும்” என்று சொன்னார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தேசுயத்தலைவர் கொடுத்த பதில்கள் வெறுமனே அந்த ஊடகம் கேட்ட கேள்விக்கான பதில் என்பதாக மட்டும் இல்லாமல் அதனை பார்க்கும், கேட்கும், வாசிக்கும் உலக அரங்கிற்கு சொல்லப்பட்ட பதில்களாகவே மிகவும் அற்புதமாக அமைந்திருந்தன. என்றுமே சிங்கள பேரினவாதம் அதன் அடக்குமுறை முகத்தை மாற்றிக்கொள்ளாது என்று வரலாற்று அனுபவங்கள் மூலம் தெரிந்து கொண்டிருந்தாலும் பிரிந்துசெல்லும் முடிவை மாற்றுவதற்கான அணுகுமுறை சிங்களத்தின் நடைமுறையில்தான் இருக்கின்றது என சொல்லி இருந்தார். மீண்டும் ஆயுதந்தாங்கி போராட விடுதலைப்புலிகள் தயாராகவே உள்ளனர் என்ற கருத்தை தேசியதலைவரின் வாயால் சொல்ல வைப்பதற்காக “பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்.?” என்று கேட்கப்பட்டபோது மிகவும் இலாவகமாக வார்த்தையை தெரிவுசெய்து “பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் தொடர்ந்து சமாதான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று சொன்னதும், “பேச்சுவார்த்தையில் அதிபர் சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நினைக்கிறீர்களா”? என்று கேட்கப்பட்டபோது சிங்களதேசத்தின் ஒரு அதிபர் தமிழ் மக்களுக்கு உரிமை கொடுப்பதற்கு எத்தகைய தடங்கல்களை கொடுப்பார் என்று தெரிந்திருந்தும் “சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.” என்பதுடன் நின்றுவிடாமல் “அவர் அப்படி ஏதும் செய்தால் அதை பார்த்து கொள்வது ரணிலின் பொறுப்பு” என்று சொன்னதன் மூலம் பதிலிலேயே ரணிலுக்கான செய்தியையும் சொல்லி இருந்தது இன்றும் ஆச்சர்யத்துடன் நோக்கப்படுகிறது. ஏறத்தாழ இதே மாதிரியான கேள்வி ஒன்று இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் 1984ம் ஆண்டு மார்ச் மாதம் ‘சண்டே’ இதழுக்காக அனிதா பிரதாப்பால் கேட்கப்பட்டபோது “ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தி இருந்திருக்க மாட்டேன்” என்று கூறியிருந்ததும் தலைவர் சிங்களதேச அதிபர்களை எப்படி பார்க்கிறார் என்று காட்டியிருந்தது.

உண்மையில் இந்த இனத்துக்கென்று தனியான ஏதும் கைநூலோ,வழிகாட்டி புத்தகமோ தேவையில்லை. தமிழீழத் தேசியத்தலைவரின் அனைத்து பேட்டிகளையும் அவரது அனைத்து மாவீரர் உரைகளையும் தொகுத்தாலே அதற்குள் இந்த இனம் இப்போது செல்லவேண்டிய திசையும் பாதையும் அதற்கான பக்குவமான முறைகளும் பொதிந்து கிடக்கிடக்கிறது. இருள்நிறைந்த இந்நேரத்தில் அவைகளே பாதை வெளிச்சங்களாக ஒளிதரக் கூடியவை.அவ்வாறான, வழிகாட்டல்களே தமிழினத்தின் விடுதலைச்சித்தாந்தம்.நாம் எதையும் வெளியில் தேடவேண்டியதில்லை மேதகு சிந்தனை எம்மை வழிநடத்தும்.

​

Continue Reading

Previous: யாழில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி: சிக்கிய பெண்கள்
Next: சர்வகட்சி மாநாடு ஆரம்பம்

Related Stories

kaje
  • தாயக செய்திகள்

அன்புள்ள திரு. கஜேந்திரகுமார்,

ஈழத்தமிழன் Juni 7, 2025
semmani
  • தாயக செய்திகள்

செம்மணி மனிதப் புதைக்குழியில் கொன்று புதைக்கப்பட்ட 600 பொதுமக்கள்

ஈழத்தமிழன் Juni 7, 2025
apthu
  • தாயக செய்திகள்

மட்டு’வில் இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு

ஈழத்தமிழன் Juni 7, 2025

நிகழ்வுகள்

anura german
  • நிகழ்வுகள்
  • யேர்மன்-செய்திகள்

யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!!

ஈழத்தமிழன் Mai 30, 2025
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025 swiss mulli

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

Mai 21, 2025
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான தமிழர்கள் . london

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான தமிழர்கள் .

Mai 18, 2025

துயர் பகிர்தல்

kirusanthi
  • துயர் பகிர்தல்

யாழ் மாணவி கிருசாந்தி குமாராசுவாமி கொலையாளிகள் மனு நிராகரிப்பு

ஈழத்தமிழன் Juni 3, 2025
பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு (யாழ். இந்திய துணைத்தூதரக 501135264_1254823329978975_998410297092714557_n

பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு (யாழ். இந்திய துணைத்தூதரக

Mai 29, 2025
செல்வச்சந்திரன் சின்னத்துரை selvacanthiran.s-thuyar

செல்வச்சந்திரன் சின்னத்துரை

Mai 22, 2025

உலக செய்திகள்

World_renu_ujkiol
  • உலக செய்திகள்

சீனாவின் J-10 போர் விமானம் – பரிசீலிக்கும் ஆசிய நாடு

ஈழத்தமிழன் Juni 7, 2025
அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களுக்கும். tamil

அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களுக்கும்.

Juni 5, 2025
கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ – அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்பு World_renu_canada-wildfires

கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ – அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்பு

Juni 5, 2025

திரைப்பக்கம்

MG_8471-1
  • திரைப்பக்கம்

வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு – இயக்குனர் கௌதமன் சூளுரை.!

ஈழத்தமிழன் Juni 7, 2025
‹ஜெயிலர் 2› படப்பிடிப்பில் நடந்தது என்ன ? Cinema_tharshi_rr

‹ஜெயிலர் 2› படப்பிடிப்பில் நடந்தது என்ன ?

Juni 2, 2025
பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி Zee தமிழில் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார், புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள்

பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி Zee தமிழில் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்,

Mai 25, 2025

நினைவில்

po sivakumar 05.06
  • தாயக செய்திகள்
  • நினைவில்

யாழில் பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவுதினம்

ஈழத்தமிழன் Juni 5, 2025
கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி மீது தாக்குதல்!! canada thupi

கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி மீது தாக்குதல்!!

Mai 28, 2025
கனடா – டொரண்டோவில் புதிய இனப்படுகொலை நினைவு தூபி : வெளியான அறிவிப்பு canada thupi

கனடா – டொரண்டோவில் புதிய இனப்படுகொலை நினைவு தூபி : வெளியான அறிவிப்பு

Mai 24, 2025

ஆக்கங்கள்

495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

ஈழத்தமிழன் Mai 4, 2025
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025

விளையாட்டு

Champions league
  • விளையாட்டு

சம்பியன் லீக் முதல் முதல் வென்றது பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன்

ஈழத்தமிழன் Juni 2, 2025
சுவிஸில் கால்பந்தாட்டத்தில் ஈழத்தமிழனின் சாதனை aswin

சுவிஸில் கால்பந்தாட்டத்தில் ஈழத்தமிழனின் சாதனை

Mai 30, 2025
பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025 WhatsApp Image 2025-05-26 at 01.16.31_6644a1ee

பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025

Mai 26, 2025

மருத்துவம்

chichen
  • மருத்துவம்

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

ஈழத்தமிழன் März 17, 2025
இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள் th

இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள்

Januar 7, 2025
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு! Cancer Vaccine (1)

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு!

Dezember 19, 2024

You may have missed

World_renu_ujkiol
  • உலக செய்திகள்

சீனாவின் J-10 போர் விமானம் – பரிசீலிக்கும் ஆசிய நாடு

ஈழத்தமிழன் Juni 7, 2025
MG_8471-1
  • திரைப்பக்கம்

வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு – இயக்குனர் கௌதமன் சூளுரை.!

ஈழத்தமிழன் Juni 7, 2025
kaje
  • தாயக செய்திகள்

அன்புள்ள திரு. கஜேந்திரகுமார்,

ஈழத்தமிழன் Juni 7, 2025
s
  • வாழ்த்துக்கள்

இசையமைப்பாளர் சிவன்ஜீவ் சிவராம் பிறந்தநாள்வாழ்த்து (07.06.2025

ஈழத்தமிழன் Juni 7, 2025

திரைப்பக்கம்

வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு – இயக்குனர் கௌதமன் சூளுரை.! MG_8471-1

வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு – இயக்குனர் கௌதமன் சூளுரை.!

Juni 7, 2025
‹ஜெயிலர் 2› படப்பிடிப்பில் நடந்தது என்ன ? Cinema_tharshi_rr

‹ஜெயிலர் 2› படப்பிடிப்பில் நடந்தது என்ன ?

Juni 2, 2025
பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி Zee தமிழில் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார், புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள்

பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி Zee தமிழில் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்,

Mai 25, 2025
கூத்து கலையில் சினிமா படம் சர்வதேச விருது பெற்ற புலம் பெயர் தமிழன் செல்வின் தாஸ். q

கூத்து கலையில் சினிமா படம் சர்வதேச விருது பெற்ற புலம் பெயர் தமிழன் செல்வின் தாஸ்.

Mai 23, 2025
திருகோணமலையில் உருவாகி வரும் “Red Wattled” திரைப்படத்தின் படப்பிடிப்பு ! Die Grundlagen (1)

திருகோணமலையில் உருவாகி வரும் “Red Wattled” திரைப்படத்தின் படப்பிடிப்பு !

Mai 21, 2025
நெதர்லாந்தில் நாளைய மாற்றம்..1.06.2025 ஞாயிறு மாலை 15.15 pm. Die Grundlagen (1)

நெதர்லாந்தில் நாளைய மாற்றம்..1.06.2025 ஞாயிறு மாலை 15.15 pm.

Mai 21, 2025
April 2025
M D M D F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Mrz   Mai »
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.