
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் நேற்று ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என ராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலினால் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு பயணம் செய்யவேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் குறித்து நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது