
நாங்கள் மறக்கமாட்டோம்.நாங்கள் மௌனமாக இருக்கமாட்டோம்.நீதி நிறைவேறும் நாள் வரைக்கும் நாங்கள் நின்றுவிடமாட்டோம்.என கனேடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 16 வருடத்தை குறிக்கும் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள கனேடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது.
இன்று 2009ஆம் ஆண்டு மே 18 அன்று இலங்கையில் முடிவுற்ற யுத்தத்தின் 16வது ஆண்டு நினைவு நாளை ஆழ்ந்த வலியுடனும் உறுதியுடனும் கனடியத் தமிழர் பேரவை நினைவுகூருகிறது. மே 18 தமிழ் மக்களின் நினைவுகளில் சொல்லொணாத் துயரம் நிறைந்த நாளாகவே என்றும் நிறைந்திருக்கும். இது துக்கம் நிறைந்த நாளும் நினைவுகளின் நாளும் நியாயம் நிலைநிறுத்தப்படும் வரைக்கும் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய காரணங்களைப் பெருத்த வலியோடு நினைவுகூரும் நாளுமாக உள்ளது.
2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில்இ பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்ற பாகுபாடுகள் இல்லாமல் இலங்கை அரசாங்கம் குறித்திருந்த பாதுகாப்பு வலையப்பகுதிகளிலேயே இலங்கை அரசினால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் போரில் இறந்தவர்கள் அல்ல; மும்முரமாக மேற்கொள்ளப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட அரச தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள். இவை சாதாரண போர்க் குற்றங்கள் அல்ல இவை திட்டமிட்ட இன அழிப்புக்கான குற்றங்கள்.
1949ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதிலிருந்து 1956ஆம் ஆண்டு தமிழர்களுக்கான தாய் மொழி உரிமை நீக்கப்பட்டமை 1958 1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் தமிழர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வன்முறைப் படுகொலைகள் 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகம் தீயிட்டு அழிக்கப்பட்டமை மற்றும் “கறுப்பு ஜூலை” என அழைக்கப்படும் 1983இன் இனவெறிக் கலவரம் என்பவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற திட்டமிட்ட தாக்குதல்களாகவே கருதப்பட வேண்டியவை.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற படுகொலைகள் என்பது இலங்கைத் தமிழ் மக்களின் வேதனையின் தொடக்கமல்ல. அது தமிழ் மக்களின் நீண்ட அவல வரலாற்றின் அதிகொடூர உச்சக்கட்டமாகும்.
இன்றுவரைஇ இலங்கையின் வடக்குஇ கிழக்குப் பகுதிகள் கடுமையான இராணுவமயமாதலுக்குள் உட்பட்டவையாகவே உள்ளன. சுமார் 100இ000 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இப்பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். தமிழ் மக்களின் நிலங்கள் தொடர்ந்தும் பறிக்கப்படுகின்றன. தமிழர்களின் வரலாற்று வழிபாட்டு இடங்கள் கைப்பற்றப்பட்டுப் பௌத்த ஆலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து இன்றுவரை எந்தப் பதில்களும் இல்லை. தமிழ் இளைஞர்கள் தங்கள் கருத்துத்துகளைத் தெரிவிப்பதற்காகக் கைது செய்யப்படுகிறார்கள். மறைமுகக் கண்காணிப்புகளும்இ அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. இன அழிப்பு இன்றும் புதிய வடிவங்களுக்கூடாக நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ் மக்கள்இ குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் உள்ளவர்கள் சமீபத்திய ஆட்சி மாற்றத்தில் சிறிது நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால்இ அந்த ஆட்சியும் பழைய ஆட்சியாளர்கள் போலவே சிங்கள பௌத்த மத ஆதிக்க அரசியல் நெறிகளையே தொடர்கிறது. நீதிஇ பொறுப்புக்கூறல் ஆகியவை வெற்று வாக்குறுதிகளாகவே மீதமிருக்கின்றன. தமிழர் நிலங்கள் கைப்பற்றப்படுகின்றன. சிதைக்கப்பட்ட இந்துக் கோயில்களுக்கு மேலாகப் புத்த சிலைகள் கட்டப்படுகின்றன. தமிழ் இளைஞர்கள் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவதற்காகக் கைது செய்யப்படுகின்றனர்.
நீதி இல்லாமல் நல்லிணக்கம் இல்லை. பொறுப்புக்கூறல் இல்லாமல் அமைதி இல்லை. இலங்கையில் நடந்ததும்இ இன்னும் தொடர்வதும் போர்ப் பின்னணியில் நிகழும் சிக்கல் அல்ல. இது இன அழிப்பே. நிலையான அமைதி ஏற்படஇ இலங்கை தன்னுடைய வரலாற்றை நேர்மையாக எதிர்கொண்டுஇ வடகிழக்கு பகுதிகளை இராணுவத்திலிருந்து விடுவித்துஇ தமிழ் மக்களுக்கு உரிய சுதந்திரத்தையும் மதிப்பையும் அதிகாரத்தையும் வழங்க வேண்டியது அவசியம்.
மேலும் பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் வறுமைஇ துன்பம் மற்றும் உளவியல் சிக்கல்களுடன் வாழ்கின்றனர். காணாமல் போன உறவுகள் குறித்த நியாயமான பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த நினைவுகள் நம்மைப் பலமாகத் தாக்குவதோடுஇ நியாயம் கிடைக்கும் வரை விடாமுயற்சியுடன் போராட வேண்டிய உறுதியையும் நமக்குத் தருகின்றன.
நாங்கள் மறக்கமாட்டோம்.
நாங்கள் மௌனமாக இருக்கமாட்டோம்.
நீதி நிறைவேறும் நாள் வரைக்கும் நாங்கள் நின்றுவிடமாட்டோம்.
இந்த முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் தமிழர் நீதி நாடும் பயணத்தில் அமைதியையும் மனிதநேயத்தையும் மதிக்கும் அனைவரையும் எங்களுடன் இணைந்து எங்களது துக்கத்தையும் போராட்டத்தையும் பகிர்ந்து கொள்ளுமாறு கனடியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது