
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அணிவகுத்த பெருந்திரளான தமிழர்கள்
தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவு சுமந்த கவனஈர்ப்பு போராட்டமும் நினைவேந்தல் நிகழ்வும் சற்றுமுன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியாவினரால் தொடங்கப்பட்டுள்ளது
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளினை நினைவுகூர இன்று (18.05.2025 ) பிரித்தானியாவில் பெருந்திரளான தமிழர்கள் ஒன்றிணைந்துள்ளனர் .









