
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து ராகுல்காந்தி தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; ‘‘அப்பா உங்களது நினைவுகள் ஒவ்வொரு செயலிலும் என்னை வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறாத கனவுகளை நனவாக்கி நிச்சயமாக நிறைவேற்றியே தீருவேன்’’எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் ராகுல் காந்தியுடன் அஞ்சலி செலுத்தினர்.