
வேடன் – இந்த கலைஞன் புதிதாக வந்தவன் இல்லை
அடக்குமுறைகளுக்கு எதிரான சிந்தனைகளை வரிகளாக்கி நீண்ட காலமாக உறுமி வரும் சொல்லிசை கலைஞன்..
எங்கள் ஈழத்தவர்கள் எவ்வாறான கலைஞர்களை கொண்டாடுவார்கள் என்றால்
இங்கே (யாழில் ) பிறந்து இந்தியாவுக்கு சென்று அங்குள்ள ஊடகங்கள் அடையாளப்படுத்தப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும்
இல்லையென்றால் இந்தியாவில் பிறந்த ஒருவராக இருக்க வேண்டும்.
எங்கள் மண் சார்ந்த வலிகளை, உணர்வுகளை படையல் செய்தும் நீங்கள் ஊக்குவிக்க மறந்த (மறுத்த ) எங்கள் கலைஞர்கள்
சுஜீத் ஜி
சந்தோர்ஸ் (மகிழன்)
ரத்தி ஆதித்தன்
இருக்கும் போதே கொண்டாடுங்கள் ..ஊக்குவியுங்கள் .
ராப் என்பது இசை மட்டுமில்லை , அடக்கப்பட்ட உணர்வுகள் வெடித்து வரும் ஓசை , உறுமல் அது கலாச்சாரம்
என்னை போன்ற கலைஞர்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை «பண்ணும் பாட்டும் விண்ணோடு சென்ற பின்னே மண்ணில் புரியும் மகத்துவம் «