
யாழ் நல்லுார் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகள் விடுதியிலிருந்து 3 மாணவிகளைக் காணவில்லை என பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவிகள் இரவோடு இரவாக விடுதியிலிருந்து வெளியேறி தப்பிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.
குறித்த மாணவிகள் விபச்சார நடவடிக்கைகளுக்காக திட்டமிட்டு ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கடும் அச்சம் நிகழ்கின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் தேடுதல்களை மேற்கொண்டுள்ளார்கள்.