
உற்றார் உறவகளையும் கண்டேன்
ஊரிலுள்ள மக்களையும் கண்டேன்
நட்பப்போல் பழகிப் பிரிந்த
உள்ளங்களையும் கண்டேன்.
நயவஞ்சகர்களையும் கண்டேன்.
பொருளுள்ள போது வந்து
போற்றிப் புகழ்தாரையம் கண்டேன்.
பொருள் வறண்டது கண்டு விலகித்
தூற்றித் திரிந்தாரையும் கண்டேன்
தளராக நட்ப்பாய்ப் பழதியோரையம் கண்டேன்
தாழ் தனம் சேர்ந்தபின் விலகியோரையம் கண்டேன்.
அன்புகொண்டவர்கள் போல் வந்தோரையம் கண்டேன்
அயல் சென்று வசை பாடுவோரையம். கண்டேன்
இப்படிப் பல பல மனிதர்கள் வாழ்க்கைப் பயணத்தில் கண்டவர்கள்,
சிரித்தார்கள்,. கட்டித் தளுவிக் கைகளைக் தோழிலும் போட்டார்கள்
அன்பில் திளைத்தேன் அவர்களை எண்ணி வியந்தேன்.
என எடுத்துரைத்த நண்பன் எதிர்பாரா விபத்தில்
இறைவனடி சென்றான்.
பழகியவர்களில் கால்பகுதினர் இறுதி ஊர்வலத்தில்
அதில் அரைக் கால்பகுதி நினைவு நாளில்
அன்று வள்ளுவன் குறளின்
வாய்மையை உணர்ந்தேன்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தக நக நட்பது நட்பு»
ஆக்கம் ,மணியம் டோட்முண்ட்.