
சீனாவின் முன்னணி J-10 போர் விமானத்தை வாங்கும் வாய்ப்பை தற்போது இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது.
சீன விமானப்படையில் பரவலாக பயன்படுத்தப்படும் J-10 விமானம், சமீபத்திய யுத்த வெற்றிகளுக்குப் பிறகு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தோனேசியாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் டொன்னி எர்மவான் டாஃபான்டோ, ஜகார்டாவில் நடந்த ஒரு பொதுக் கலந்தாய்வின் போது, சீனா J-10 விமானங்களை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக Bloomberg மற்றும் Reuters செய்தியளித்துள்ளன.
இவையெல்லாம் ஆரம்பக்கட்ட பரிசீலனை மட்டுமே என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் எந்த தொழில்நுட்ப குழுவும் விமானங்களை நேரில் ஆய்வு செய்ய அனுப்பப்படவில்லை.
சீனாவின் J-10 மட்டுமல்லாமல் அமெரிக்காவின் F-15EX மற்றும் பிரான்சின் Rafale போர் விமானங்களும் இந்தோனேசியாவின் பரிசீலனையில் உள்ளன. ஆனால் விலை மற்றும் பிற ஆதரவுகள் முக்கிய முடிவெடுக்கும் காரணிகளாக இருக்கின்றன.
சீனாவின் J-10CE விமானம் சமீபத்தில் பாகிஸ்தான்-இந்தியா மோதலில் பல இந்திய விமானங்களை வீழ்த்தியதாக சீனாவின் CCTV கூறியுள்ளது. இந்த செய்தி இந்தோனேசியாவிற்கு முக்கிய கவனமாக இருக்கிறது.
“விலை சிறந்ததாகவும், செயல்திறன் நமக்கு ஏற்றதாகவும் இருந்தால் ஏன் வாங்கக்கூடாது?” என டாஃபான்டோ கூறுகிறார்.