
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் முற்பகல் 01.00 மணி நிலவரப்படி 36% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான (Sri Lanka parliamentary election) வாக்களிப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் மாவட்டச் செயலகம் இன்று (14) விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் முற்பகல் 10.00 மணி வரையான நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.