
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை இந்தியா வெளியேற்றியதை அடுத்து, பாகிஸ்தானிலுள்ள உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரை 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற இந்திய வெளியுறவு அமைச்சரகம் உத்தரவிட்டது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு இந்திய அதிகாரியை வெளியேற்றவதற்கான உத்தரவை பாகிஸ்தான் பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் அறிக்கையின்படி, “இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியை, முரணான செயல்களில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தான் அரசு அவரை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரக அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் தங்கள் சலுகைகள் மற்றும் அந்தஸ்தை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது