
அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றது, தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையின் வெற்றியாகும் என மு.கா. செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ் – முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக ஒன்றாக காணி வர்த்தமானி சம்பந்தமாக பாராளுமன்றத்திலும், வெளியிலும் குரல் கொடுத்ததின் விளைவாக, இன்று (27) அரசாங்கம் உரிய வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது.
தமிழ் முஸ்லிம் மக்களின் ஒரு வெற்றியாக இதை கருத வேண்டும். இலங்கை வாழ் தமிழ்பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் அதுவும் முக்கியமாக வடகிழக்கில் உள்ள மக்கள், எதிர்காலத்திலும் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கு, ஒன்றாக செயல்பட செயல்பட வேண்டிய தேவையை இது உணர்த்துகிறது.