Skip to content
Dezember 18, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • தாயக செய்திகள்
  • தாய் தமிழ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமாம்!
  • தாயக செய்திகள்

தாய் தமிழ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமாம்!

ஈழத்தமிழன் November 3, 2024
tham

நான்காவது ஆசனத்தை பெற வேண்டுமாக இருந்தால் சில்லறைத் தனமான கட்சிகளுக்கும் சுயேட்ச்சை குழுக்களுக்கும் வாக்களிப்பதை தவிர்த்து உங்களது கட்சி என்று சொல்லப்படுகின்ற தமிழ் தாய் கட்சியான தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடியில் நேற்று (02) மாலை இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசனால் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை மேற்கு கிளையின் தலைவர் கோபாலபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்த அலுவலக திறப்பு விழாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை மேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் சண்முகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் பரப்புரைக்கூட்டமும் நடைபெற்றது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த வேட்பாளர் சிறிநேசன்,

சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து மாற்று இன கட்சிகளுக்கு ஆசனத்தை பெற்றுக் கொள்வதற்காக போட்டி இடுகின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய கட்சி தான் ஆனால் அந்த கட்சி வாக்குகளை சிதறடிக்க முடியுமே தவிர ஒரு ஆசனத்தை மட்டக்களப்பில் கைப்பற்ற முடியாது.

அடுத்ததாக திசை காட்டி புதிய கடை ஒன்று திறந்து விட்டால் எல்லோரும் ஓடி சென்று அந்த கடைக்குள் பொருட்களை கொள்ளளவு செய்வார்கள். அதே போன்று தான் இப்போது நாங்கள் சிலர் எங்களில் சிலர் முட்டி அடிக்கின்றார்கள். அங்கு செல்கின்றார்கள் ஒன்றை மாத்திரம் கூற விரும்புகின்றேன்.

ஊழல் இல்லாத மோசடி இல்லாத ஒரு நேர்மையான ஆட்சியை கொண்டுவரப் போகிறோம் என்கிறார்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தமிழர்களுக்கு இருக்கின்ற விசேடமான ஒரு பிரச்சனை என்னவென்றால் இனப்பெரு பிரச்சனைக்கான தீர்வு பெற வேண்டும்.

காணாமல் ஆகப்பட்ட உறவுகளுக்கு ஒருவர் நீதி பரிகாரம் வழங்க வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் 3,000 நாட்களுக்கு மேலாக எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இந்த தேசிய மக்கள் சக்தி என்ன செய்யப் போகின்றது தேசிய இன பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு இருக்கின்றது என்பது பற்றி ஆராய வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் ஒரு செயலாளராக இருக்கின்றார் அவர் ஒரு பொதுச் செயலாளர் அவர் ஒரு கருத்தை முன் வைத்திருக்கின்றார். அதாவது 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் பற்றியோ அதிகாரப் பகிர்வு பற்றியோ அக்கறை கொள்ளவில்லை என்பதனை குறிப்பிட்டிருக்கின்றார்.

நாங்கள் சொல்வது என்னவென்றால் இந்த கட்சிக்கு அளிக்கின்ற வாக்கு என்பது தமிழர்கள் ஏமாற்றப்படுகின்ற ஒருவன் நிலைக்குத் தான் தள்ளப்படும் அடுத்ததாக டெலிபோன் சின்னத்திற்கு அளிக்கப்படும். தமிழர்களின் வாக்குகளின் மூலமாக ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாது.

அதற்கான வாய்ப்பு இல்லை எனவே நாம் சொல்லக்கூடியது அந்த கட்சிக்கு வாக்களித்தால் எமது தமிழர்களின் பிரதிநிதித்துவம் ஒன்றை விளக்க வேண்டி ஏற்படும்.

படகு கட்சியாக இருக்கட்டும் காரில் போட்டியிடுகின்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்று சொல்லப்படுகின்றவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் கடந்த காலத்தில் எமது போராட்டத்தை காட்டி கொடுத்தவர்கள் என்பதனை நீங்கள் மறந்து விடக்கூடாது.

கிழக்கை பாதுகாக்கின்றோம் என்று இவர்கள் கூறுகின்றார்கள் மயிலத்தமடு, மாதவனை போன்ற இடத்தில் குடியேறிய ஆக்கிரமிப்பாளர்களை அவர்களால் வெளியேற்ற முடியவில்லை. அரசோடு இணைக்க அரசியல் செய்தால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று சொன்னார்கள்.

இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இங்கு அரசியல் செய்து எதை சாதித்திருக்கின்றார்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்துக்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவோம் என்று கூறினார்கள் என்ன நடந்திருக்கின்றது ஒன்றுமே இல்லை.

ஆகவே இந்த படகு காரில் போட்டிருக்கின்றார்கள் கூறுவது எல்லாம் வடிகட்டிய பொய் இந்த காரில் போட்டியிடும் நபர் கப்பலில் போட்டியிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க வைத்திருக்கின்றார். இப்போது இங்கு வந்து இங்கு இருக்கின்ற ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க வைக்க போகின்றார்.

இந்த சங்கு சின்னத்தில் போட்டியிட போகின்றவர்கள் இவர்கள் கடந்த காலத்தில் குத்துவிளக்கு சின்னத்தை பெற்றார்கள். தற்பொழுது சங்கு சின்னத்தை பெற்று கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பெற்றது போன்று இவ்வாறு பெற்று விடலாம் என நினைக்கின்றார்கள் ஆனால் அவ்வாறு இடம் கூறப்போவதில்லை.

கடந்த காலத்தில் போட்டியிட்டவர்கள் எமது கட்சியிலிருந்து தாவிச்சென்றவர்கள் இப்போது அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் போன்று எம்மை ஏமாற்றியவர்கள் இப்பொழுது ஏமாந்து வெளியில் இருக்கின்றார்கள். எனவே தயவு செய்து உங்களிடம் கூறக் கூடியது தமிழரசு கட்சி என்பது தமிழ் தேசியத்திற்காக போராடுகின்ற காட்சி தமிழர்களின் ஒற்றுமைக்காக பாடுபடுகின்ற கட்சி.

தற்போது எமது கட்சிக்குள் சில குளறுபடிகள் இருந்தாலும் தேர்தலின் பின்னர் இந்த குளறுபடிகள் தீர்க்கப்பட வேண்டும் சரியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதனை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தயவு செய்து தமிழ் தேசிய தரப்பில் இன்று ஒரு உறுதியான பாதையில் செல்லக்கூடிய கட்சி தமிழரசு கட்சி என்பதனை மறந்து விடக்கூடாது. எனவே தமிழர் கட்சி தவறான கருத்துக்களை அளப்பவர்கள் தயவு செய்து இந்த தேர்தல் மூலமாக ஒரு பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக அவர்கள் இந்த தமிழரசு கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பது இரண்டு என்று சொல்லப்பட்டது ஆரம்பத்தில் இப்போது மூன்று என்று பேசப்படுகின்றது எனவே தமிழரசு கட்சியின் மீது மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.

நான்காவது ஆசனத்தை பெற வேண்டுமாக இருந்தால் சில்லறைத்தனமான கட்சிகளுக்கும் சுயேட்ச்சை குழுக்களுக்கும் வாக்களிப்பதை தவிர்த்து உங்களது கட்சி என்று சொல்லப்படுகின்ற தமிழ் தாய் கட்சியான தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

நீங்கள் ஒரு தடவை தவறவிட்டால் இன்று தேர்தல் நெருங்குகின்ற போது அலுவலகங்கள் அநேகமான இடங்களில் திறக்கப்பட்டிருக்கின்றது இந்த அலுவலகங்கள் சில வேளைகளில் சாராயம் வழங்குகின்ற நிலையங்களாக கூட மாறக்கூடும் பல இடங்களில் ஏன் திறக்கின்றார்கள்.

என்று பார்த்தால் அந்த இடத்தில் சாராயங்களை அரிசிப்பொதிகளை பதுக்கி வைத்திருந்து கொடுத்து ஒரு மோசடித்தனமான முறையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் முயல்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

5,000 ரூபாய் போலி நாணயம் அச்சடிக்கப்பட்டிருக்கின்றது இந்த போலி நாணயங்களை யார் அடித்தார் என்பது தெரியும் இதனை செய்தவர்கள் சில வேளைகளில் வருகின்ற தேர்தலின் போது 5,000 போலி நோட்டுகளை வழங்கி வாக்குகளை பெறுவதற்கு முயற்சிக்க கூடும் எனவே ஒரு தடவை தவறவிட்டால் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

தங்களுக்காக நாடு பிடிக்கச் சென்றவர்கள் இப்போது காணி பிடிக்க சென்று கொண்டிருக்கின்றார்கள் ஆகவே நாடு பிடிக்க சென்ற போராட்டம் சொந்த தேவைக்காக காணி பிடிக்கின்ற போராட்டமாக மாறி இருக்கின்றது.

சிறிநேசன் மற்றும் ஸ்ரீதரன் அவர்கள் வென்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற எதிர் பேச்சு கூறுகின்றார்கள் இதிலிருந்து ஒன்று விளங்குகின்றது இவர்கள் இருவரும் வெல்வார்கள் என்று இவர்கள் வென்று விடுவார்கள் என்பதற்காக இவ்வாறு பேச்சுக்களை கூறுகின்றார்கள் இவ்வாறான விஷமத்தனமான பிரச்சாரங்களை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.

Post navigation

Previous: யாழ் நல்லூர் பிரதேச சபை ஊழியர் சடலமாக மீட்பு !
Next: ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு: தவெகவின் 26 தீர்மானங்கள்..!

Related Stories

kaithu
  • தாயக செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கைது

ஈழத்தமிழன் Dezember 17, 2025 0
puttar
  • தாயக செய்திகள்

தையிட்டி விகாரை தேரருக்கு அதிகாரம் – ஓரணியில் அரசும் – எதிர்க்கட்சியும்

ஈழத்தமிழன் Dezember 17, 2025 0
jaffna
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளம் தாய்க்கு அரங்கேறிய கொடூரம்

ஈழத்தமிழன் Dezember 17, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ,பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் நினைவெழுச்சி – பெல்சியம் belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ,பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் நினைவெழுச்சி – பெல்சியம்

Dezember 17, 2025 0
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – பிரிகேடியர் சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு (20.12.2025) 20.12
  • நிகழ்வுகள்
  • நினைவில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – பிரிகேடியர் சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு (20.12.2025)

Dezember 15, 2025 0
தேசத்தின் குரலுக்கு த.தே.ம.முன்னணி அஞ்சலி anton
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தேசத்தின் குரலுக்கு த.தே.ம.முன்னணி அஞ்சலி

Dezember 14, 2025 0
வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் anton
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

Dezember 14, 2025 0
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0

பிரதான செய்திகள்

6b5d71fe-da14-4c9e-bd43-93e8ecdeed32
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)

ஈழத்தமிழன் November 22, 2025 0
மரண அறிவித்தல் அமரர் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா) ஜூன் 15, 1941 நவம்பர் 22, 2025 புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்...
மேலும் Read more about துயர் பகிர்தல் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)
துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசி 585187309_10162885177314504_7125978939593748051_n
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசி

November 21, 2025 0
டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் மரணம் keer (1)
  • துயர் பகிர்தல்

டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் மரணம்

November 18, 2025 0
துயர் பகிர்தல் நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன் துயர் பகிர்வுr (1)
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன்

November 18, 2025 0
துயர் பகிர்தல் சதாசிவம் விநாயகமூர்த்தி v (1)
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் சதாசிவம் விநாயகமூர்த்தி

November 16, 2025 0

ஆக்கங்கள்

w
  • திரைப்பக்கம்

பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.

ஈழத்தமிழன் September 23, 2025 0
Ibctamil தயாரிப்பிலும் நவயுகா இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட பொம்மை திரைப்படம் 22.09.2025 இன்று மட்டக்களப்பு சுகந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை...
மேலும் Read more about பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.
செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம் pommai
  • திரைப்பக்கம்

செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம்

September 3, 2025 0
யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம். 524345411_1341398317995483_7021057234526287065_n
  • திரைப்பக்கம்

யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்.

Juli 28, 2025 0
இலங்கைக்கான படையெடுப்பு? ravi
  • திரைப்பக்கம்

இலங்கைக்கான படையெடுப்பு?

Juli 20, 2025 0
இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்! Cinema_tharshi_vedan
  • திரைப்பக்கம்

இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்!

Juli 14, 2025 0
loading...

மீள் பார்வைக்கு

kaithu
  • தாயக செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கைது

ஈழத்தமிழன் Dezember 17, 2025 0
puttar
  • தாயக செய்திகள்

தையிட்டி விகாரை தேரருக்கு அதிகாரம் – ஓரணியில் அரசும் – எதிர்க்கட்சியும்

ஈழத்தமிழன் Dezember 17, 2025 0
jaffna
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளம் தாய்க்கு அரங்கேறிய கொடூரம்

ஈழத்தமிழன் Dezember 17, 2025 0
belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ,பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் நினைவெழுச்சி – பெல்சியம்

ஈழத்தமிழன் Dezember 17, 2025 0

Posts Grid

images (1)
  • அறிவியல்

யேர்மனியில் Rheinhessenனில் அமைய இருக்கும் புதிய ஆலயப்பணிக்கு உதவ பக்தர்களுக்கு வேண்டுகோள்

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
ad (1)
  • அறிவியல்

அடோப் ஃபோட்டோஷாப், அக்ரோபேட் ChatGPT-யில் இணைக்கிறது

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
Chinies astronauts (1)
  • அறிவியல்

204 நாட்களுக்கு பின்னர் பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

ஈழத்தமிழன் November 16, 2025 0
Elon
  • அறிவியல்

ஸ்பேஸ்எக்ஸ் 11வது ஸ்டார்ஷிப் சோதனைப் பயணத்தை நிறைவு செய்தது

ஈழத்தமிழன் Oktober 15, 2025 0
1760245914
  • அறிவியல்

சீனா தனது கிராவிட்டி-ஒன் ரொக்கெட்டை விண்ணில் செலுத்தியது!

ஈழத்தமிழன் Oktober 12, 2025 0
Tendencias-Tik-Tok-1
  • அறிவியல்

TikTok தளத்தின் விதிமுறைகள் தமிழில்

ஈழத்தமிழன் August 18, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.