Skip to content
Dezember 17, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • தாயக செய்திகள்
  • மாவீரர் துயிலுமில்லங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் : விடுக்கப்பட்ட கோரிக்கை
  • தாயக செய்திகள்

மாவீரர் துயிலுமில்லங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் : விடுக்கப்பட்ட கோரிக்கை

ஈழத்தமிழன் November 9, 2025
venthan

நல்லதொரு புரந்துணர்வு இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் நிச்சயமாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் அகன்று செல்லவேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் நேற்று (08) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”கார்த்திகை மாதம் என்பது தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்களை நினைவு கூருகின்ற மாதம். அந்தவகையிலே கார்த்திகை 21 தொடக்கம் 27ஆம் திகதிவரை மாவீரர் வாரமாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசமெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வருட மாவீரர் நினைவேந்தல் சிறப்பாக நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. புலம்பெயர் தேசங்களிலும் அந்தந்த நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல் இடம்பெறுவதற்க்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

தாயகத்திலே ஒரு சில மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் அகன்றிருக்கின்றனர். கணிசமான மாவீரர் துயிலுமில்லங்களில் இராணுவ முகாம்கள் உள்ளன.

இதனால் ஒவ்வொரு வருடமும் தமது பிள்ளைகளுக்கு சுதந்திரமாக நினைவேந்தல் செய்வதற்கு மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

அந்தவகையிலே இந்தவருடமும் மாவீரர் வாரத்தை சிறப்பாக அனுஸ்டிப்பதற்கு எஞ்சியிருக்கின்ற மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி ஒரு தேசிய நல்லிணக்கத்தோடு, விட்டுக்கொடுப்போடு இந்த வருடமும் மாவீரர்களை நினைவேந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கடற்றொழில் அமைச்சர் ஒரு அறிவித்தலை விடுத்திருக்கின்றார். அதாவது மாவீரர் துயிலுமில்லங்களில் இருக்கின்ற இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான உத்தரவை ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளருக்கு கொடுத்திருக்கின்றார்.

எதிர்வரும் காலங்களில் மக்கள் சுதந்திரமாக மாவீரர்களை நினைவேந்தல் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறியிருக்கின்றார். நாங்கள் அந்த கருத்தை வரவேற்கின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இது பேச்சளவிலே இல்லாமல் செயலளவிலே இருக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

மாவீரர் பெற்றோர்கள், உறவினர்கள், உரித்துடையோர் எல்லோரும் இந்த துயிலுமில்லங்களுக்கு அருகிலேதான் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவீரர் துயிலுமில்லங்களை கடந்து செல்கின்றபோது வலிகளோடும் வேதனைகளோடும்தான் கடந்து செல்கின்றனர்.

ஆகவே போரின்மீது ஒரு சமாதானத்தை கொண்டுவந்துள்ளோம் என்று கூறிவருகின்ற அரசாங்கம் மக்களது வேதனைகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தங்களது பிள்ளைகளது கல்லறைகளிலே தான் இராணுவம் ஏறி இருக்கின்றது என்ற மன வேதனையுடன்தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறெனில் ஒரு தேசிய நல்லிணக்கம் வருவதற்குரிய வாய்ப்பே இல்லை. ஆகவே ஒரு இனம் இன்னொரு இனத்தின் மவீர்களது கல்லறைமீது ஏறியிருப்பது என்பது தேசிய நல்லிணக்கத்தை பாதிக்கும்.

நல்லதொரு புரந்துணர்வு இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் நிச்சயமாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் அகன்று செல்லவேண்டும்.” என தெரிவித்துள்ளார்

Post navigation

Previous: மூன்று நாட்களில் இலக்கை எட்டவுள்ள இலங்கை சுங்கத் திணைக்களம்
Next: மரண அறிவித்தல்! வேலும்மயிலும் இரத்தினம்மா (08/11/2025)

Related Stories

10
  • தாயக செய்திகள்

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து

ஈழத்தமிழன் Dezember 16, 2025 0
1732716295-VideoCapture_20241127-140215
  • தாயக செய்திகள்

வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் 19ஆம் திகதி வரையில் மழை தொடரும் வாய்ப்பு

ஈழத்தமிழன் Dezember 16, 2025 0
vipa
  • தாயக செய்திகள்

மட்டக்களப்பு விபத்தில் கல்லூரி மாணவன் பலி

ஈழத்தமிழன் Dezember 16, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – பிரிகேடியர் சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு (20.12.2025) 20.12
  • நிகழ்வுகள்
  • நினைவில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – பிரிகேடியர் சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு (20.12.2025)

Dezember 15, 2025 0
தேசத்தின் குரலுக்கு த.தே.ம.முன்னணி அஞ்சலி anton
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தேசத்தின் குரலுக்கு த.தே.ம.முன்னணி அஞ்சலி

Dezember 14, 2025 0
வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் anton
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

Dezember 14, 2025 0
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0

பிரதான செய்திகள்

6b5d71fe-da14-4c9e-bd43-93e8ecdeed32
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)

ஈழத்தமிழன் November 22, 2025 0
மரண அறிவித்தல் அமரர் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா) ஜூன் 15, 1941 நவம்பர் 22, 2025 புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்...
மேலும் Read more about துயர் பகிர்தல் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)
துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசி 585187309_10162885177314504_7125978939593748051_n
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசி

November 21, 2025 0
டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் மரணம் keer (1)
  • துயர் பகிர்தல்

டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் மரணம்

November 18, 2025 0
துயர் பகிர்தல் நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன் துயர் பகிர்வுr (1)
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன்

November 18, 2025 0
துயர் பகிர்தல் சதாசிவம் விநாயகமூர்த்தி v (1)
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் சதாசிவம் விநாயகமூர்த்தி

November 16, 2025 0

ஆக்கங்கள்

w
  • திரைப்பக்கம்

பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.

ஈழத்தமிழன் September 23, 2025 0
Ibctamil தயாரிப்பிலும் நவயுகா இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட பொம்மை திரைப்படம் 22.09.2025 இன்று மட்டக்களப்பு சுகந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை...
மேலும் Read more about பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.
செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம் pommai
  • திரைப்பக்கம்

செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம்

September 3, 2025 0
யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம். 524345411_1341398317995483_7021057234526287065_n
  • திரைப்பக்கம்

யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்.

Juli 28, 2025 0
இலங்கைக்கான படையெடுப்பு? ravi
  • திரைப்பக்கம்

இலங்கைக்கான படையெடுப்பு?

Juli 20, 2025 0
இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்! Cinema_tharshi_vedan
  • திரைப்பக்கம்

இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்!

Juli 14, 2025 0
loading...

மீள் பார்வைக்கு

bresi
  • உலக செய்திகள்

பிரேசிலில் பலத்த காற்றில் சரிந்து விழுந்த நூற்றாணடு கால சுதந்திர தேவி சிலை

ஈழத்தமிழன் Dezember 16, 2025 0
dkkdld
  • உலக செய்திகள்

யேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் கைது!

ஈழத்தமிழன் Dezember 16, 2025 0
10
  • தாயக செய்திகள்

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து

ஈழத்தமிழன் Dezember 16, 2025 0
1732716295-VideoCapture_20241127-140215
  • தாயக செய்திகள்

வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் 19ஆம் திகதி வரையில் மழை தொடரும் வாய்ப்பு

ஈழத்தமிழன் Dezember 16, 2025 0

Posts Grid

images (1)
  • அறிவியல்

யேர்மனியில் Rheinhessenனில் அமைய இருக்கும் புதிய ஆலயப்பணிக்கு உதவ பக்தர்களுக்கு வேண்டுகோள்

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
ad (1)
  • அறிவியல்

அடோப் ஃபோட்டோஷாப், அக்ரோபேட் ChatGPT-யில் இணைக்கிறது

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
Chinies astronauts (1)
  • அறிவியல்

204 நாட்களுக்கு பின்னர் பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

ஈழத்தமிழன் November 16, 2025 0
Elon
  • அறிவியல்

ஸ்பேஸ்எக்ஸ் 11வது ஸ்டார்ஷிப் சோதனைப் பயணத்தை நிறைவு செய்தது

ஈழத்தமிழன் Oktober 15, 2025 0
1760245914
  • அறிவியல்

சீனா தனது கிராவிட்டி-ஒன் ரொக்கெட்டை விண்ணில் செலுத்தியது!

ஈழத்தமிழன் Oktober 12, 2025 0
Tendencias-Tik-Tok-1
  • அறிவியல்

TikTok தளத்தின் விதிமுறைகள் தமிழில்

ஈழத்தமிழன் August 18, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.