
வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி பிரதேசத்தின் கற்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கீரிசுட்டான் இளந்தென்றல் முன்பள்ளியின் 25 சிறார்களுக்கு 13.02.2026 அன்று சீருடை மற்றும் பொத்தகப்பை, கொப்பி, நிறப்பென்சில் என்பன வழங்கிவைக்கப்பட்டது. இதனை யேர்மனி மத்திய மானிலம் 2ல் வாழும் தாயக உறவுகளின் பேராதரவில் அகரம் -2025 பல்சுவை கலைமாலை நிகழ்வின் மூலம் பாதிப்புற்ற தாயக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு உதவி வழங்கல் எனும் தொனிப்பொருளில் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு அயல்கிராமமான ஒலுமடு தமிழ்வித்தியாலய அதிபர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் தாயக கல்வி கலை பண்பாட்டுக்கூடத்தின் தலைவர் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவ் உதவியை வழங்கிய யேர்மனி மத்திய மானிலம் 2ல் வாழும் தாயக உறவுகளுக்கு கீரிசுட்டான் கிராம மக்கள் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
