தித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 203 நபர்களுக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பதிவாளர் நாயகம் துறை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்தார்.
திடீர் பேரிடருக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு எந்த புதிய தகவலும் இல்லாமல் ஒருவர் காணாமல் போனால் இறப்புச் சான்றிதழ் வழங்க இது உதவும். அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அரசாங்க இழப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்த இது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேரிடரில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 611 நபர்களில் 126 பேருக்கு ஏற்கனவே இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டதாக பதிவாளர் நாயகம் கூறினார்.
