
டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தை எடுத்துக்கொள்வதாக அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்த நிலையில் கனடாவும் பிரான்சும் ஆர்க்டிக் தீவில் புதிய தூதரகங்களைத் திறக்கின்றன.
அத்துடன் கனடாவும் மற்றும் பிரான்சும் ஆர்க்டிக் பாதுகாப்பை அதிகரிக்க விரும்புவதாகக் கூறுகின்றன.
டென்மார்க் மற்றும் அரை தன்னாட்சி பெற்ற டென்மார்க் பிரதேசமான கிரீன்லாந்துக்கு அமெரிக்காவிடமிருந்து தொடர்ச்சியான மற்றும் ஆக்கிரோஷமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதால் அதற்கான ஆதரவைக் குறிக்கிறது.
நேற்று வெள்ளிக்கிழமை கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், நூக்கில் ஒட்டாவாவின் துணைத் தூதரகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
