Skip to content
Dezember 8, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • தாயக செய்திகள்
  • செம்மணிக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – யாழ்.கிறிஸ்தவ ஒன்றியம்
  • தாயக செய்திகள்

செம்மணிக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – யாழ்.கிறிஸ்தவ ஒன்றியம்

ஈழத்தமிழன் Juli 25, 2025
IMG_5826

யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழிக்கு இலங்கை அரசும் சர்வதேசமும்  முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என யாழ் கிறிஸ்தவ ஒன்றியம்  கோரிக்கை விடுத்துள்ளது.  

இது தொடர்பில் யாழ்.கிறிஸ்தவ ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது, 

இக்கொலைகளை மேற்கொண்ட இலங்கை அரசு, அதற்கு உதவிய சர்வதேச நாடுகள் அனைத்தினதும் பொறுப்பற்ற கொலை முன்னெடுப்புகள், மனுக்குலத்துக்கு எதிரான குற்றங்கள் என இயேசுவின் இறையாட்சியின் விழுமியங்கள் அடிப்படையில் பதிவிடுகிறோம். 

கொலை செய்யாதே – விப 20:13′, மனித மாண்பை வலியுறுத்தும் சமயக்கட்டளையாக இருப்பினும், ‚கொலை செய்தல்‘ இடைவிடாமல் அகிலமெங்கும் தொடரப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவேண்டிய பொறுப்பு, சர்வதேச சமூகத்தால் முறையாக நடைமுறைப்படுத்த நிலையே யதார்த்தமாகிவிட்டது. கொலை வலையமைப்பு தரும். 

அண்மையில் வெளியிடப்பட்ட ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை, இலங்கை அரசின் கொலைவலையமைப்பை, உறுதிப்படுத்தி வாழ்த்துவது போலவே அமைந்திருந்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வரும் சிங்கள பௌத்த அரசுகளால், அவர்களுடைய அடக்குமுறைக்குப் பலியான தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை கொடுக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ள முடியாமலுள்ளது என்பது வரலாற்று உண்மை என்பதை சர்வதேசம் உட்பட அனைவரும் புரிந்துகொள்வது முக்கியம். 

யாழ், செம்மணி மனிதப்புதை குழியில் அடையாளப்படுத்தப்பட்ட என்புத்தொகுதிகள் எமக்கு வெளிப்படுத்தும் உண்மை என்ன? அகழ்வின்போது வெளிப்பட்ட நீல நிறத்திலான புத்தக பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையொன்றின் எலும்புக்கூடு, பாதணி மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மையொன்று என்பன .எமது மனிதநேயத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகின்றன அல்லவா? இச்செம்மணி மனித புதைகுழி மற்றும் என்புத்தொகுதிகள், நாம் கொலைகாரரின் நாட்டில் வாழ்கிறோம் என்பதை மட்டுமே வெளிப்படுத்துகின்றன.

இலங்கை அரசும் சர்வதேசமும், முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலகட்டத்தில் பொறுப்பிலிருந்தவர்கள் நீதியின் முன் கொண்டுவரப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வேறு எந்தெந்த இடங்களில் மனிதப்புதைகுழிகள் அடையாங்காட்டப்பட்டவையோ அந்த இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு, நீதியை உறுதி செய்வதற்கு அவசியமான பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பான ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ப்படவேண்டும்.

காணாமலாக்கப்பட்ட உறவுகள் உட்பட, பாதிக்கப்பட்ட மக்களின் கூக்குரல் மதிக்கப்படவேண்டும். நீதி கிடைக்கும் என அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மதித்து, ஐக்கிய நாடுகள் சபையின் செப்ரெம்பர் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் பரிகாரநீதியை உறுதி செய்ய வேண்டும். போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை பொறுப்புடன் கையாளாத இலங்கையின் புதிய அரசு பாதிக்கப்பட்டோரை புரிந்துகொள்ள வேண்டும்.

பலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செல்வி. கிருஷாந்தி குமாரசாமி உட்பட, எமது வரலாற்றில் செம்மணியில் நடைபெற்றுள்ள மனித மாண்பற்ற செயல்களுக்காக உரிய விசாரணைகளை மேற்கொண்டு நீதி உறுதி செய்யப்படவேண்டும். இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஸ வெளியிட்ட சாட்சியத்தின்  அடிப்படையில்,  செம்மணியில் 300 – 400 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நீதிக்காக செயற்படுவது இன்றைய காலத்தின் தேவை. 

உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கி கதறிக்கொண்டிருக்கிறது (தொடக்க நூல் 4:10)”, என கடவுள், கொலையாளி காயீனுக்கு கூறியது போல, செல்வி. கிருஷ்சாந்தி குமாரசாமி உட்பட பலருடைய கதறலை அங்கீகரித்து, உரிய நீதியை பொறுப்புடன் மேற்கொள்ள யாழ் கிறீஸ்தவ ஒன்றியம் அனைவரையும், குறிப்பாக இதனுடன் நேரடியாக சம்பந்தப்பட்டோரை அழைக்கிறது. – என்றுள்ளது

Post navigation

Previous: கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ் . வந்தவர் சடலமாக மீட்பு
Next: அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம்…

Related Stories

IMG-20251208-WA0077
  • தாயக செய்திகள்

யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும் – யாழில் போராட்டம்

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
IMG-20251208-WA0027 (1)
  • தாயக செய்திகள்

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
Anaiya vilakku 5
  • தாயக செய்திகள்

அணையா விளக்கும் மீட்டும் உடைப்பு

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

IMG-20251208-WA0077
  • தாயக செய்திகள்

யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும் – யாழில் போராட்டம்

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கு , மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ள நிலையில் ,  விளையாட்டரங்கு வேண்டும் என...
மேலும் Read more about யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும் – யாழில் போராட்டம்
யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள் IMG-20251208-WA0027 (1)
  • தாயக செய்திகள்

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்

Dezember 8, 2025 0
சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதம்
  • Uncategorized

சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதம்

Dezember 8, 2025 0
ஆபிரிக்க நாடான பெனினில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முறியடிப்பு nenin (1)
  • உலக செய்திகள்

ஆபிரிக்க நாடான பெனினில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முறியடிப்பு

Dezember 8, 2025 0
மீண்டும் வடக்கில் கன மழை எச்சரிக்கை! waa (1)
  • இலங்கைசெய்திகள்

மீண்டும் வடக்கில் கன மழை எச்சரிக்கை!

Dezember 8, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

IMG-20251208-WA0077
  • தாயக செய்திகள்

யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும் – யாழில் போராட்டம்

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
IMG-20251208-WA0027 (1)
  • தாயக செய்திகள்

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
  • Uncategorized

சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதம்

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
nenin (1)
  • உலக செய்திகள்

ஆபிரிக்க நாடான பெனினில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முறியடிப்பு

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.