Skip to content
Dezember 7, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • ஜேவிபியின் பூநகரி கள்ளக்காணி வியாபாரம்?
  • இலங்கைசெய்திகள்

ஜேவிபியின் பூநகரி கள்ளக்காணி வியாபாரம்?

ஈழத்தமிழன் Mai 26, 2025
landdd

பூநகரி முழங்காவிலில் நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோத காணி கட்டுமானங்களை தடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்களிற்கு தலைமை தாங்கிய நபர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பூநகரி பிரதேசசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் படுதோல்வியடைந்த இந்நபர் சபேசன் என பெயருடையவரெனவும் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் அனுமதியற்ற கல் அரிவு ஆலையென நாச்சிக்குடாவில் கொடி கட்டி பறப்பவரெனவும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் தேர்தலில் படுதோல்வியடைந்த போதிலும் பின்கதவு வழியாக அந்நபர் நியமிக்கப்பட்டுள்ளமை ஆதரவாளர்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.பிரதமர் ஹரிணி பங்கெடுத்த பிரச்சாரக்கூட்டங்களை ஒருங்கமைத்ததுடன் தனது அனுமதியற்ற கல் அரிவு ஆலையில் மேடை அமைத்துக்கொடுத்ததாகவும் அதன் மூலம் தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் மனதில் இடம்பிடித்துக்கொண்டதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் ஆளும் தரப்பின் ஆசீர்வாதத்துடன் அரச காணிகளை பிடித்துக்கொள்ள முன்னெடுக்கப்பட்ட சதி திட்டமே பிரதேசசபை அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே அவர்கள் மீது தாக்குதல் நடாத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் அம்பலமாகியுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முழங்காவில் நாச்சிக்குடா முதல் கரியாலைநாகபடுவான் வரையென அரச காணிகளை 55துண்டுகளாக்கி தனது ஆதரவாளர்களிற்கு கடைகள் அமைக்க பகிர்ந்து வழங்கும் திட்டம் வகுப்பட்டிருந்தது.எனினும் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டபின்னராக அதனை சந்திரசேகரன் -இளங்குமரன் அணி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.அத்திட்டத்தை முன்னெடுக்கும் முகவராக பிரதேசசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பின்கதவு உறுப்பினர்   சபேசன் நியமிக்க்பபட்டுள்ளார்.

ஒரு துண்டு நிலம் பத்து இலட்சமென்ற அடிப்படையில் முற்பணமாக ஒரு இலட்சம் பதினொரு பேரிடம் பெறப்பட்டுள்ளது.

தற்காலிகமானதும் பிரதேசசபையால் அகற்றப்படமுடியாததுமான தகர கொட்டகைகள் அருகிலுள்ள கிராமமான குமுழமுனையில் தயாரிக்கப்பட்டு இரவோடிரவாக காணிகள் நிறுவப்படும்.பின்னர் அங்கு வர்த்தக நடவடிக்கைகளில் பத்துவருடங்களிற்கு மேலாக ஈடுபடுவதாக காரணங்காட்டி காணிகளிற்கான உரிமைகளை வழங்குவதே திட்டமாகும்.

இத்திட்டத்தை வகுத்துக்கொடுத்தவர்களாக பூநகரி பிரதேசசெயலாக குடியேற்ற உத்தியோகத்தர் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் இருந்துவருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மையிலேயே கரவெட்டி பிரதேசசெயலகத்திலிருந்து இடமாற்றத்தில் குடியேற்ற உத்தியோகத்தர் அங்கு சென்றிருந்ததாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விரு அதிகாரிகளும் கடந்த இருவாரங்களாக முழங்காவிலில் தங்கியிருந்து செயற்பட்டுள்ளனர்.பூநகரி பிரதேசசெயலர் அகிலன் மாகாணசபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் புதிய செயலாளராக ஆயகுலன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவரது தந்தையாரின் மரணத்தினால் பதவியேற்பதிலுள்ள இடைவெளியையும் பயன்படுத்தி கல்லா கட்ட முற்பட்டமையும் அதனுள் விடயம் தெரியாமல் பிரதேசசபை தலையிட்டமையுமே குழப்பதினுள் முடிந்துள்ளது.

குறிப்பாக எதிர்வரும் 2ம் திகதி முதல் தமிழரசுக்கட்சி சார்பு பிரதேச சபை ஆட்சியமைக்க பெரும்பான்மையினை பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக கடைகளினை பகிர எதிர்வரும் செவ்வாய் கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சரது இரகசிய கூட்டமும் வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமும் அழைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே முழங்காவிலில் கடந்த கால அரசியல் சூழல்களால் பல பெரும் வர்த்தகர்கள் ஜந்து முதல் பத்து கடைகள் உரிமையாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில் அனுமதியற்ற கட்டடங்களிற்கு வழக்கு மற்றும் கடைகளை சுவீகரிப்பதென பிரதேசசபை மறுபுறம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக கூறப்படும் நிலையில் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக பிரதேசசபை சட்டவிரோத கட்டுமானங்களை கண்காணிப்பதை முழங்காவிலில் கைவிடலாமென்ற பேசப்படுகின்ற போதும் அதனை பிரதேசசபை செயலாளர் மறுதலித்துள்ளார்.

Post navigation

Previous: பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025
Next: கலைஞர் கணேஸ் தம்பையாவின் பிறந்தநாள்வாழ்த்து 26.05.2023

Related Stories

thuppa
  • இலங்கைசெய்திகள்

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

ஈழத்தமிழன் Dezember 6, 2025 0
swiss
  • இலங்கைசெய்திகள்

சுவிஸிலிருந்து நிவாரணப்பொதிகளுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானம்

ஈழத்தமிழன் Dezember 6, 2025 0
10
  • இலங்கைசெய்திகள்

ஆடம்பரங்களை தவிர்த்து அர்த்தமுள்ள வகையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுங்கள்

ஈழத்தமிழன் Dezember 6, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

1002657715 (1)
  • தாயக செய்திகள்

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...
மேலும் Read more about யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்
வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்! vadamarachi 1 (1)
  • தாயக செய்திகள்

வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!

Dezember 7, 2025 0
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது 4 (1)
  • தாயக செய்திகள்

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

Dezember 7, 2025 0
கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர் 596023087_2780280975475636_7159256228982915213_n (1)
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்

Dezember 7, 2025 0
கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி ! sada
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி !

Dezember 7, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

1002657715 (1)
  • தாயக செய்திகள்

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
vadamarachi 1 (1)
  • தாயக செய்திகள்

வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
4 (1)
  • தாயக செய்திகள்

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
596023087_2780280975475636_7159256228982915213_n (1)
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.