
எங்களுடைய இலக்குகளை அடைவதற்கு சாத்வீக ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் போராட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சியை பலப்படுத்துவதற்கு எங்களுடன் கைகோருங்கள் என அவர் மேலும் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் அடம்பன் பகுதியில் நேற்று (28) நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
