Skip to content
Dezember 12, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • தாயக செய்திகள்
  • பிடித்த காணிகளை தானமாக வழங்குகின்றதா அனுர அரசு!
  • தாயக செய்திகள்

பிடித்த காணிகளை தானமாக வழங்குகின்றதா அனுர அரசு!

ஈழத்தமிழன் September 8, 2025
anu

வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் காணிகளை சட்டவிரோதமாக கபளீகரம் செய்து வைத்திருக்கும் இலங்கை அரசாங்கம் அந்த காணிகளை மக்களிடம் கையளிப்பதை ஏதோ அந்த மக்களுக்கு இனாமாகக் கொடுப்பது போன்று விளம்பரப்படுத்துகின்றதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து பதினாறு வருடம் முடிவடைந்த நிலையிலும் அந்தக் காணிகளுக்கு உரித்தான மக்களிடம் அதனைக் கையளிக்காமல் படையினரே தம்வசம் வைத்துள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, »இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் தொலைதூரங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள்.

இதனால் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகள் சிங்கள மக்களுக்குப் போய்ச்சேர்ந்தது. இதற்கு அடிப்படைக் காரணமாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களை சிறுபான்மையினராக்குவதே தென்னிலங்கை ஆளும் வர்க்கத்தின் நோக்கமாக இருந்தது.

இவற்றிற்கெதிரான பல்வேறுபட்ட போராட்டங்களை தமிழ் மக்கள் நடத்தினாலும்கூட ஒவ்வொரு அரசாங்கமும் பலாத்கார சிங்கள குடியேற்றங்களை ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தது.

வெறுமனே காணிகளைப் பிடிப்பது மாத்திரமல்லாமல், மொழிவாரியாக, கல்வி வாரியாக பல்வேறுபட்ட வழிமுறைகளிலும் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். இதற்கெதிரான போராட்டங்களும் தொடர்ந்துகொண்டே இருந்தது.

இந்தப் போராட்டங்களுக்கு எதிராக அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டபோது அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்கள். இதன் காரணமாகவே பல்வேறுபட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றதுடன் மிக நீண்டகால ஆயுதப்போராட்டத்திற்கும் அது வழிவகுத்தது.

இந்தப் போராட்ட காலகட்டத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள் முப்படையினராலும் காவல்துறையினரினாலும் பலவந்தமாகக் கைப்பற்றப்பட்டது.

இராணுவத்தினர் இவற்றைக் கைப்பற்றுவதற்கான எவ்வித சட்ட உரித்தோ அல்லது தார்மீக நெறிமுறைகளோ இல்லாவிட்டாலும் கூட அக்காணிக்கு உரித்தான மக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு அவர்களின் காணிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.

இப்பொழுது யுத்தம் முடிவடைந்து பதினாறு வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் இன்னும் அந்தக் காணிகளுக்கு உரித்தான மக்களிடம் அதனைக் கையளிக்காமல் படையினரே தம்வசம் வைத்துள்ளனர்.

சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்ட காணிகளை யுத்தம் முடிந்து பதினாறு வருடங்கள் கழிந்த பின்னரும் படையினர் தம்வசம் வைத்திருப்பதுடன் அவற்றிற்கு உரிமை கோரவும் முற்படுகின்றனர்.

எதிர்த்தரப்பிலிருந்து அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்படும் என்று கூறும் சகல கட்சிகளும் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை மறந்துவிடும் சூழ்நிலைதான் நிலவுகின்றது.

இன்றிருக்கக்கூடிய முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியும்கூட ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆக்கபூர்வ நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை.

ஊழலுக்கு எதிராக இலஞ்ச லாவன்யங்களுக்கு எதிராக கைதுகள் வழக்குகள் என்று செயற்படும் அரவு சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிப்பதில் மாத்திரம் பின்னடித்துக்கொண்டே இருக்கின்றது. மக்களின் காணிகளை வைத்திருப்பதற்கான எவ்வித சட்டபூர்வமான அருகதையும் காணிகளைக் கபளீகரம் செய்து வைத்திருப்பவர்களுக்கு இல்லை.

ஆகவே, இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்போம் என்று கூறுகின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த காணிகள் தொடர்பான திட்டவட்டமான முடிவினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அல்லாவிடின் இவர்களும் சட்டவிரோத நடவடிக்கைக்குத் துணைபோகிறவர்கள்தான் என்பதுதான் தமிழ் மக்களின் பார்வையாக இருக்கும்.

கொழும்பிலோ, காலியிலோ, ஹம்பாந்தோட்டையஜலோ சிங்கள மக்களுக்குச் சொந்தமான காணிகளை ஆளும் தரப்பினரால் இவ்வாறு பலாத்காரமாகப் பிடித்து வைத்திருக்க முடியுமா? அவற்றில் பாரிய கட்டுமானங்களை உங்களால் மேற்கொள்ள முடியுமா? அதனை படையினர் விவசாயம் செய்யும் நிலமாக உங்களால் மாற்ற முடியுமா? இதற்கு சிங்கள மக்கள் இடம்கொடுப்பார்களா?

ஆனால் இவை அனைத்தையும் தமிழ் பிரதேசங்களில் நீங்கள் செய்கிறீர்கள். தமிழ் மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தியும் எடுக்கின்றதா? என்ற கேள்வி மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாங்கள் இனவாதிகள் அல்ல, மதவாதிகள் அல்ல தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்குவோம் என அடிக்கடி முழக்கமிடுகிறீர்களே ஆனால் அதில் ஏதேனும் ஒன்றாவது நடைமுறையிலுள்ளதா?

உங்களது முப்படையினரில் மூன்றில் இரண்டிற்கும் மேற்பட்ட பெரும்பகுதி வடக்கு-கிழக்கிலேயே நிலைகொண்டுள்ளது. இவர்களது முகாம்களுக்காகவும் பயிற்சிக்காகவும் படையணிகளின் விளையாட்டிற்காகவும் அவர்களது விவசாயத்திற்காகவும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகளை நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள்.

யுத்தம் முடிந்து பதினாறு வருடங்கள் கழிந்த நிலையில் இங்கு எவ்வித துப்பாக்கிக் கலாசாரமும் இல்லை. ஆனால் தென்பகுதியில் நாளாந்தம் துப்பாக்கிச் சூடும், கொலைகளும் நாளாந்தம் நடைபெறுகின்றன.

படையினரை தென்பகுதியிலுள்ள சிங்கள மக்களின் பாதுகாப்பிற்கு அனுப்புவதினூடாக தமிழ் மக்களுக்கான காணிகளை அவர்களிடமே கையளிக்க முடியும் என்பதுடன் தென்பகுதி மக்களும் அச்சமின்றி வாழ்வார்கள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post navigation

Previous: யாழில் ரில்வின் சில்வாவினால் நூலகம் திறந்து வைப்பு
Next: நீதி கோரி அறிக்கை:கையளித்துள்ளது யாழ்.ஊடக அமையம்!

Related Stories

anparasi
  • தாயக செய்திகள்

யாழில் திடீர் தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
596952913_10240029495379012_3967134610718058504_n (1)
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி சுவிஸ் தமிழ் சங்கமும், அக்கினி பறவைகள் அமைப்பும் இணைந்துவழங்கிய நிதி

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
9a27622a-bb53-4d87-9053-f4c963ea53e2 (1)
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம்

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

anparasi
  • தாயக செய்திகள்

யாழில் திடீர் தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். 43 வயதான ஆசிரியையான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே...
மேலும் Read more about யாழில் திடீர் தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி சுவிஸ் தமிழ் சங்கமும், அக்கினி பறவைகள் அமைப்பும் இணைந்துவழங்கிய நிதி 596952913_10240029495379012_3967134610718058504_n (1)
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி சுவிஸ் தமிழ் சங்கமும், அக்கினி பறவைகள் அமைப்பும் இணைந்துவழங்கிய நிதி

Dezember 11, 2025 0
நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ! 1765445858 (1)
  • இலங்கைசெய்திகள்

நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !

Dezember 11, 2025 0
கனடா 4 அமைப்புகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. 1765437417 (1)
  • உலக செய்திகள்

கனடா 4 அமைப்புகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது.

Dezember 11, 2025 0
காணாமல்போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க முடிவு! 1765432911
  • Uncategorized

காணாமல்போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க முடிவு!

Dezember 11, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

anparasi
  • தாயக செய்திகள்

யாழில் திடீர் தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
596952913_10240029495379012_3967134610718058504_n (1)
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி சுவிஸ் தமிழ் சங்கமும், அக்கினி பறவைகள் அமைப்பும் இணைந்துவழங்கிய நிதி

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
1765445858 (1)
  • இலங்கைசெய்திகள்

நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
1765437417 (1)
  • உலக செய்திகள்

கனடா 4 அமைப்புகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது.

ஈழத்தமிழன் Dezember 11, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.