Skip to content
Dezember 14, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • தாயக செய்திகள்
  • வாக்காளர்களை மிரட்டும் ஒட்டுக்குழுக்கள் ! மக்கள் முன்னணி
  • தாயக செய்திகள்

வாக்காளர்களை மிரட்டும் ஒட்டுக்குழுக்கள் ! மக்கள் முன்னணி

ஈழத்தமிழன் November 4, 2024 1 minute read
ttm

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற்ற ஓட்டுக்குழுக்கள் தற்போது இரவில் குழுக்களாக கிராமங்களுக்குள் புகுந்து தாய்மார்களை மிரட்டி வாக்குகளை பெறுவதற்கான சூட்சுமங்களில் ஈடுபடுகின்றனர் எனவே தமிழ் மக்கள் இந்த தேர்தலை கவனமாக கையாளவேண்டும் அதேவேளை தேர்தலை ஜனநாயக முறையில் நடாத்த தேர்தல் திணைக்களம், ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்புக் குழு அமைப்புக்கள் பெவரல் அமைப்பு செயற்பட வேண்டும் என சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வெஸ் ஒப் மீடியா கற்றை நிலையத்தில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் 2009க்கு பின்னர் இருந்த காலங்களைவிட மிக இறுக்கமான தேர்தலைக் கையாளுகின்றனர் கடந்த காலங்களில் ஓட்டுக்குழுக்கள் தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தலைச் செய்து பாராளுமன்றம் முதலமைச்சர் பதவிகளையும் ஏனைய சலுகைகளையும் பெற்றுக் கொண்ட இந்த ஊழல்வாதிகள் இந்த தேர்தலையும் ஒரு ஜனநாயக ரீதியில் நடாத்த விடாமல் மக்கள் மத்தியில் சென்று அவர்களை மீண்டும்  அவர்களை மிரட்டி வாக்குகளைப் பெறுகின்ற ஒரு பயங்கரமான நிலைப்பாடு நடந்தேறுகின்றது.

குறிப்பாக ஜெயந்திபுரத்தில் கருணா பிள்ளையான் கட்சி ஆதரவாளர்களுக்குள்ளே இடம்பெற்ற மோதலில் 3 பேர் வைத்தியசாலையில் 6 பேர் கைது இதேபோன்று என்னுடைய என்னுடைய சொந்தஊரான படுவான்கரை பிரதேசத்திலுள்ள முனைக்காடு பிரதேசத்தில் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கேயும் பிள்ளையானின் அடியாள் ஒருவர் வந்து பிள்ளையான் வீதி  அமைத்துள்ளார் அவருக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்து எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இவ்வாறு கடந்தகாலத்தில் ஆயுத முனையில் அச்சுறுத்தல் செய்த மாதிரி இந்த தேர்தலில் குழுக்களாக சேர்ந்து அச்சுறுத்தலை மேற்கொண்டு ஒரு ஜனநாயக வழியில் தேர்தலை நடாத்த விடாமல் அச்சுறுத்தல் வழியில் தங்களுக்கான வாக்குகளை பெறுவதற்கு முயற்சிக்கின்றனர்.

துமிழ் மக்களை இதுவரை ஏமாற்றி வந்துள்ள தரப்புக்களை ஒதுக்கப் போகின்றனர் என்ற நிலைப்பாட்டை அறிந்த ஒட்டுக்குழுக்கள் கிராமங்களிலே இரவுவேளைகளில்  உட்புகுந்து மக்களையும் தாய்மார்களையும் மிரட்டி வாக்குகளைப் பெறுவதற்கான கூட்சமங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் இந்த ஊழல் வாதிகளையும் ஒட்டுக்குழுக்ககளையும்  நிராகரிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏற்கனவே மிக மோசமான அச்சுறுத்தலுக்கு உட்பட்ட நிலையிலே இந்த தேர்தலும் அவ்வாறான நிலை காணப்படுகின்றது  எனவே தேர்தலை ஜனநாயக முறையில் நடாத்த தேர்தல் திணைக்களம், ஜனாதிபதி,  தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் பெவரல் அமைப்பு விளங்கிக் கொண்டு செயற்படவேண்டும்.   

எனவே தேர்தலை மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் ஏற்கனவே இடம்பெற்ற தேர்தல் போன்று இந்த தேர்தலைக் கையாளக்கூடாது ஏன் என்றால் இந்த தீவிலே தமிழ் மக்கள் உரிமையோடு எதிர்காலத்தில் வாழக்கூடிய மாதிரி வடகிழக்கிலுள்ள தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும்.

கடந்த நல்லாட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஏக்கிய இராஜ்ஜிய இடைக்கால அறிக்கை கிடைப்பிலே கிடக்கின்றது இந்த நாட்டின் ஜனாதிபதி தெளிவாகத் தெரிவித்திருந்தார் இந்த நாட்டில் வெற்றியீட்டும் தமிழர் தரப்புடன் இணைந்து தேர்தலுக்குப் பின்னராக நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்  எனவே அவர் ஒற்றையாட்சிகுள்ளே தான் இந்த தீர்வை காண்பதற்காக மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த காலங்களிலே இருந்த தமிழ் தலைமைகள் அத்தனை பேரும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிறைவேற்றும் முகமாக அவர்களது  நடவடிக்கைகள் இருந்ததுடன் இந்திய பிரதமருக்கு 13 திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனக் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த ஏழு கட்கிகளும் தான் இன்று பிரிந்து நின்று  சங்கிலும் வீட்டிலும் கேட்கின்றனர் இந்த வடக்கு கிழக்கிலே ஒரு நேர்மையான உறுதியான தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைக் கொண்டு செல்லக் கூடிய எமது கட்சி தலைவர் கஜேந்திரகுமார் செயற்படுகின்றார் கடந்த 15 வருடமாக மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என உறுதியாக இருக்கின்றார் அப்படிப்பட்ட அவருக்கு மக்கள்  திரண்டு கூடிய ஆசனங்களை வழங்கும் பட்சத்தில் தான் இந்த நடைபெறவுள்ள பெரும் ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றக் கூடியதாக இருக்கும்.

வீடு சங்கில் போட்டியிடுகின்றவர்கள் இந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை விரும்பி ஒத்துழைப்பார்கள் இவர்கள் இங்கே தேர்தலில் பிரிந்து நின்று கேட்டாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வருகின்றபோது ஜனாதிபதியுடன் இணைந்து இந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்குச் செல்வார்கள் என்பதை மக்கள் உணரவேண்டும். எனவே கஜேந்திரகுமார் அணிக்குக் குறைந்த பட்சம் 10 ஆசனங்களை மக்கள் வழங்குகின்ற போது ஜனாதிபதியின் இந்த சதியைக் கண்டிப்பாக முறியடிப்போம் என்றார்.

Post navigation

Previous: இலங்கையில் பாடசாலை ஒன்றுக்கு சீனா அளித்த நன்கொடை
Next: ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் யாழ். சிறுமி !

Related Stories

anton
1 minute read
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

ஈழத்தமிழன் Dezember 14, 2025 0
c3f89b08-6ef9-41a9-9cb2-3dc7c7e80a7e
1 minute read
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியம்,ராஜ் சிவநாதன்;

ஈழத்தமிழன் Dezember 13, 2025 0
598478581_10235633914641151_334086819817093414_n (1)
1 minute read
  • தாயக செய்திகள்

யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது.

ஈழத்தமிழன் Dezember 13, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் anton
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

Dezember 14, 2025 0
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0

பிரதான செய்திகள்

6b5d71fe-da14-4c9e-bd43-93e8ecdeed32
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)

ஈழத்தமிழன் November 22, 2025 0
மரண அறிவித்தல் அமரர் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா) ஜூன் 15, 1941 நவம்பர் 22, 2025 புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்...
மேலும் Read more about துயர் பகிர்தல் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)
துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசி 585187309_10162885177314504_7125978939593748051_n
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசி

November 21, 2025 0
டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் மரணம் keer (1)
  • துயர் பகிர்தல்

டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் மரணம்

November 18, 2025 0
துயர் பகிர்தல் நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன் துயர் பகிர்வுr (1)
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன்

November 18, 2025 0
துயர் பகிர்தல் சதாசிவம் விநாயகமூர்த்தி v (1)
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் சதாசிவம் விநாயகமூர்த்தி

November 16, 2025 0

ஆக்கங்கள்

w
1 minute read
  • திரைப்பக்கம்

பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.

ஈழத்தமிழன் September 23, 2025 0
Ibctamil தயாரிப்பிலும் நவயுகா இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட பொம்மை திரைப்படம் 22.09.2025 இன்று மட்டக்களப்பு சுகந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை...
மேலும் Read more about பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.
செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம் pommai
  • திரைப்பக்கம்

செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம்

September 3, 2025 0
யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம். 524345411_1341398317995483_7021057234526287065_n
  • திரைப்பக்கம்

யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்.

Juli 28, 2025 0
இலங்கைக்கான படையெடுப்பு? ravi
  • திரைப்பக்கம்

இலங்கைக்கான படையெடுப்பு?

Juli 20, 2025 0
இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்! Cinema_tharshi_vedan
  • திரைப்பக்கம்

இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்!

Juli 14, 2025 0
loading...

You may have missed

puyal
  • இலங்கைசெய்திகள்

புயலின் தாக்கம்- சிறிலங்காவில் வரைபடத்தில் இருந்து காணாமல் போகவுள்ள இரு கிராமங்கள்

ஈழத்தமிழன் Dezember 14, 2025 0
anton
1 minute read
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

ஈழத்தமிழன் Dezember 14, 2025 0
Major General Alexei Rtishchev (1)
1 minute read
  • உலக செய்திகள்

தடவை இரசாயணத் தாக்குதல்களை நடத்தியது: ரஷ்யா

ஈழத்தமிழன் Dezember 14, 2025 0
ukar (1)
1 minute read
  • உலக செய்திகள்

உக்ரைனுக்குச் சென்ற கப்பல் பற்றி எரிகிறது

ஈழத்தமிழன் Dezember 14, 2025 0

Posts Grid

images (1)
1 minute read
  • அறிவியல்

யேர்மனியில் Rheinhessenனில் அமைய இருக்கும் புதிய ஆலயப்பணிக்கு உதவ பக்தர்களுக்கு வேண்டுகோள்

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
ad (1)
1 minute read
  • அறிவியல்

அடோப் ஃபோட்டோஷாப், அக்ரோபேட் ChatGPT-யில் இணைக்கிறது

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
Chinies astronauts (1)
1 minute read
  • அறிவியல்

204 நாட்களுக்கு பின்னர் பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

ஈழத்தமிழன் November 16, 2025 0
Elon
1 minute read
  • அறிவியல்

ஸ்பேஸ்எக்ஸ் 11வது ஸ்டார்ஷிப் சோதனைப் பயணத்தை நிறைவு செய்தது

ஈழத்தமிழன் Oktober 15, 2025 0
1760245914
1 minute read
  • அறிவியல்

சீனா தனது கிராவிட்டி-ஒன் ரொக்கெட்டை விண்ணில் செலுத்தியது!

ஈழத்தமிழன் Oktober 12, 2025 0
Tendencias-Tik-Tok-1
1 minute read
  • அறிவியல்

TikTok தளத்தின் விதிமுறைகள் தமிழில்

ஈழத்தமிழன் August 18, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.