
நவம்பர் 14 நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நான் களம் இறங்க வேண்டுமென கடந்த கிழமை நான் சார்ந்த அரசியல் கட்சியிலும் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் உரையாடலை மேற் கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மற்றும் தீவிர ஆதரவாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகள்.
எனது தனிப்பட்ட காரணம் கருதியே தேர்தலில் களம் இறங்க தயார்ப்படுத்தவில்லை எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் களம் இறங்குவேன் தமிழ்த் தேசியத்தின் இருப்பிற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் தேசத்தின் நிலையான அபிவிருத்திக்கும் இயலுமான பங்களிப்பை வழங்குவேன்.
தேர்தல் இலக்கை விட இனத்தின் விடுதலையே பிரதான இலக்கு!
நவம்பர் 14 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் ஒற்றுமையை உறுதி செய்ய சங்குச் சின்னத்திற்கு புள்ளடி இடுங்கள் என அனைவரையும் வேண்டுகின்றேன்.
சபா குகதாஸ்
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்
ஈழத்தமிழன் கருத்து கிழ் இணைக்கப்பட்டுள்ளது
தாயக அரசியல் நிலைமையை தெளிவாக புரிந்து நற்சிந்தனையுடன் பயணிக்கும் திரு சபா கோதாஸ் அவர்கள் பல நல்ல விடையங்களை முன்னெடுக்கின்ற இந்த வேளையில் தனது லட்சியபாதையில் தாயக மக்களின் நல் நோக்கம் எண்ணி அரசியல் களங்களிலே பல ஊடகங்களிலே அரசியலாய்வாளராகவும் பேச்சாளராகவும் வரலாற்று ஆசிரியராகவும் பயணித்து வருகின்ற திரு சபா கோதாச அவர்கள் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை கூட ஓர் நற்சிந்தனையுடன் தவிர்ப்பது என்பது அவருடைய நல்ல மனதையும் சிறந்த லட்சியத்தையும் மக்களின் தேவைகளையும் புரிந்த ஓர் சிந்தனையாக இருக்கின்றது ஆனாலும் வருகின்ற காலத்தில் நிச்சயமாக இவர்கள் போன்ற தாயக சிந்தனையுள்ள தமிழ் மக்கள் மேல் கருசனை உள்ளவர்கள் நிச்சயமாக அடுத்து வருகின்ற தேர்தல்களில் கலந்து கொள்வதன் மூலம் மக்களுக்கான சிறப்பான அரசியல் சேவைசெய்ய வாருங்கால தேர்தலில் இணைதல்மூலம் இவர்கள் சேவை மக்களுக்காக இருக்கும்