
இரு பாடசாலை மாணவர்களை தாக்கி சித்திரவதை செய்ததாக கூறப்படும் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் போராட்டம்
மாத்தளை பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் ஒருவரது சகோதரனுக்கும் தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.2025
- ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் குறித்து வெடித்த புதிய சர்ச்சை
- பிரித்தானியாவில் இலங்கைத் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
- ஸ்ரீதரன் எழுப்பிய ஐந்து புகார்களில், மண்டைத்தீவில் உள்ள கல்லறைகள் தொடர்பானது மட்டுமே போதுமான ஆதாரங்கள்!
- செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் ஆளுனரிடம் கேட்டறிந்த பிரிட்டன் தூதுவர்