
குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை சொகுசு வாகனம் ஒன்று புல்கமுவ ஓயாவில் பாய்ந்து விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான 25 மற்றும் 27 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடம் வளைவுகள் நிறைந்த இடம் எனவும், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலங்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.