
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து கைதியொருவர் நேற்று சனிக்கிழமை (23) இரவு உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபர் ஆவார்.
துஷ்பிரயோக குற்றம் ஒன்றுக்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இந்த கைதி நேற்றிரவு சிறைக்கூடத்துக்குள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தபோது, உடனடியாக சிறைக்காவலர்கள் அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.