
சமூகப் பரப்பு நோக்கி முன்னகர்த்தும் ஓர் பொறுப்புவாய்ந்த பணித்தளத்திலே தனது இறுதி நாட்கள்வரை சுயாதீனமாகச் செயற்பட்டு வந்தார்.தொலைக்காட்சி வாயிலாகத் துறைசார்ந்தவர்களை இணைத்து, அரசியல் சமூக கலாச்சார மற்றும் சுகாதார விழிப்புணர்வு விடயங்களை ஆய்வரங்குகளாக நிகழ்த்தி, அவற்றைப் பயன்தரு விடயங்களாக வெளிக்கொண்டு வருவதற்காக புலம்பெயர் தேசங்களில் மாத்திரமல்ல தாயகத்திலிருந்தும் பொருத்தமுடையோரை உள்ளீர்த்துப் பணி தொடர்ந்தார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேறுபாடு காட்டாத அன்பையும், நற்பண்பையும் பகிர்ந்து, நகைச்சுவையாகக் கருத்தாடும் தன்மை எல்லோரையும் எப்போதும் ஈர்ப்புக் கொள்ளும் ஒருவராக வாழ்ந்தார். இயல்பாகவே ஒரு மனிதரிடம் குடிகொள்ளும் பல்வேறு விதமான நெறிமுறைகளிலிருந்து, சரியானவற்றையும், மீள்பயன்பாட்டுக்கானவற்றையும் தாங்கிச் சுமக்கின்ற பண்பாட்டு இயல்புகளுக்கூடாக, முல்லைமோகன் அவர்கள் விதைத்துச் செல்லும் நல்ல விடயங்கள் யாவும் பயனுள்ளதாகவே நீட்சி பெறும். இவரது பிரிவுத்துயர் சுமந்து வாடும் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களோடு நாமும் துயரினைப் பகிர்ந்து இவரது ஆன்மா அமைதிபெற இயற்கயை வேண்டுகின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி Tamils Coordinating Committee – Germany
