Skip to content
Juni 18, 2025
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Linkedin
  • Whatsapp
eelam 2

ஈழத்தமிழர்களின் செய்தித்தளம்

Primary Menu
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • தாயக செய்திகள்
  • உலக செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • இந்திய செய்திகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
  • யேர்மன்-செய்திகள்
  • திரைப்பக்கம்
  • விளையாட்டு
  • கவிதைகள்
Watch
  • Home
  • 2025
  • März
  • 5
  • ஜெனீவா ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்-03.03.2025.
  • நிகழ்வுகள்

ஜெனீவா ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்-03.03.2025.

ஈழத்தமிழன் März 5, 2025
uno

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் ஜெனீவா தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் ஈகை பேரொளி முருகதாசன் திடலில் 03.03.2025 அன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

இப் போராட்டமானது, சிறிலங்கா அரசு திட்டமிட்டு நடாத்திவரும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதிகோரியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுவிக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தியும் ஐரோப்பாவாழ் தமிழ் மக்களின் ஒன்றிணைவுடன் உணர்வெழுச்சியோடு நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் ஜெனீவா தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில், இளைய தலைமுறையினரோடு உணர்வாளர்களும் மக்களும் என நூற்றுக்கணக்கானோர் இணைந்து தமிழீழத் தேசியக் கொடிகளையும் பதாதைகளையும் தாங்கியவாறு ஐ.நா வளாகம் அதிர கொட்டொலிகளை எழுப்பி, வேற்றினத்தவரின் அதிக கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்பிரிவினராலும், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பாலும் ஐ.நா மன்றத்தின் இலங்கையின் மனித உரிமையை கண்காணிக்கும் உறுப்பினர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அவர்களுடன் தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை, இன்னும் தாயகத்திலும் மற்றும், தாயகம் திரும்பும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை பற்றியும் பேசப்பட்டது. அத்துடன் தாங்கள் தொடர்ந்தும் இலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் கூறியிருந்தனர். அது மட்டும் இன்றி அவர்கள் எம்மை தொடர்ந்து நாங்கள் வாழுகின்ற நாடுகளில் அதிக மக்களைத் திரட்டி எமது உரிமைக்கான குரல்களை எழுப்புமாறும், மற்றும் அந்த நாட்டு வெளிவிகார அமைச்சர்களிடம் தொடர்புகளைப் பேணுமாறும் கேட்டுக்கொண்டனர். ஐநா முன்றலில் எம்மால் இன்று ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர், தொடர்ந்தும் எம்மை எமக்கு நடந்த அநீதிக்கு எதிராக குரல்கொடுக்குமாறும் கூறியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து முருகதாசன் திடலில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பின்னர் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தமிழீழத்தேசியக்கொடியை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் திரு.ரகுராம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைப்பேரொளிகளுக்கான திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதோடு, மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து அகவணக்கம் மற்றும் உறுதிமொழி இடம்பெற்றது. உறுதிமொழி இடம்பெறும் போது அனைத்துலக ரீதியில் கலந்து கொண்ட தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் மேடையில் உணர்வோடு பங்கெடுக்க, ஏனைய தமிழ் மக்கள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் படத்தையும் தமிழீழத் தேசியக்கொடியையும் கையில் ஏந்தியவாறு எழுச்சியுடன் உறுதிமொழி எடுத்தனர். சிறப்புரையினை அனைத்துலகத் தொடர்பக நிர்வாக பொறுப்பாளர் திரு. தினேஷ் அவர்கள் ஆற்றியிருந்தார். அதில், தற்பொழுது புலம்பெயர் தேசங்களில் இருக்கும் கட்டமைப்புக்களைச் சீர்குலையச்செய்யும் வழியில் நடந்துவரும் போலி பிரச்சாரங்கள் பற்றியும், முக்கியமாக சுவிஸ் நாட்டில், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிற்கு எதிராக நடந்துவரும் பிரச்சாரங்கள் பற்றியும் தெளிவூட்டல் ஒன்றை வழங்கியிருந்தார். தொடர்ந்து அனைத்துலக ரீதியில் கலந்து கொண்ட தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களாலும், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களாலும் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் மற்றும் இத்தாலி மொழிகளிலும் உரைகள் வழங்கப்பட்டன.

ஈகை பேரொளி முருகதாசன் திடல், உணர்வெளுச்சி பொங்கும் வண்ணம், பிரித்தானியா கலை பண்பட்டுக் குழுவின் தலைமையில் வருகை தந்த இளம் சிறுமிகள் எழுச்சி நடனம் ஒன்றினை வழங்கி இருந்தனர். இறுதி நிகழ்வாக பிரகடனம் வாசிக்கபட்டதனைத் தொடர்ந்து, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற உரமேற்றும் பாடல் இசைக்கப்பட்டு, அதன் பின்னர் தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலுடன் இக் கவனயீர்ப்பு போராட்டமானது பேரெழுச்சியுடன் நிறைவுபெற்றது.

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பால் வேற்றின மக்களுக்கான துண்டுப்பிரசுரம் திடலில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்கள் தாயகமாகிய தமிழீழதேசம் விடுதலை அடையும்வரை எத்தடைவரினும் அத்தடைதகர்த்து, மாவீரர்கள் காட்டிய பாதையில் அவர்கள் ஈகங்கள் வழிநின்று, தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தொடர்ந்தும் போராடுவோமென அறிவிப்பாளரின் உணர்வின் வரிகளோடு உறுதியெடுத்து தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற உரத்த பேரொலியோடு இப் போராட்டம் நிறைவுபெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாபெரும் போராட்டமானது, இனவெறி சிறிலங்கா அரசிற்கும்,எம்மை சதி செய்து அழிக்க நினைக்கும் பிராந்திய சக்திக்கும், சர்வதேசத்திற்கும் மற்றும் ஏனைய கட்டமைப்புகளுக்கும் ஒரு செய்தியை சொல்லி நிற்பதோடு, தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்போராட்டம் உணர்வோடு கொண்டு செல்லப்படும் என்பதை கட்டியம் கூறிநிற்கின்றது.

Continue Reading

Previous: வடக்கு மாகாணத்தை ஆளப்போகின்றேன்; அருச்சுனா எம்.பி
Next: முல்லைத்தீவில் மாத்திரை உட்கொண்ட ஒன்றரை வயதுடைய குழந்தை உயிரிழப்பு !

Related Stories

anura german
  • நிகழ்வுகள்
  • யேர்மன்-செய்திகள்

யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!!

ஈழத்தமிழன் Mai 30, 2025
swiss mulli
  • நிகழ்வுகள்
  • நினைவில்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

ஈழத்தமிழன் Mai 21, 2025
london
  • நிகழ்வுகள்
  • நினைவில்

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான தமிழர்கள் .

ஈழத்தமிழன் Mai 18, 2025

நிகழ்வுகள்

anura german
  • நிகழ்வுகள்
  • யேர்மன்-செய்திகள்

யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!!

ஈழத்தமிழன் Mai 30, 2025
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025 swiss mulli

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

Mai 21, 2025
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான தமிழர்கள் . london

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளான தமிழர்கள் .

Mai 18, 2025

துயர் பகிர்தல்

kirusanthi
  • துயர் பகிர்தல்

யாழ் மாணவி கிருசாந்தி குமாராசுவாமி கொலையாளிகள் மனு நிராகரிப்பு

ஈழத்தமிழன் Juni 3, 2025
பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு (யாழ். இந்திய துணைத்தூதரக 501135264_1254823329978975_998410297092714557_n

பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு (யாழ். இந்திய துணைத்தூதரக

Mai 29, 2025
செல்வச்சந்திரன் சின்னத்துரை selvacanthiran.s-thuyar

செல்வச்சந்திரன் சின்னத்துரை

Mai 22, 2025

உலக செய்திகள்

dkdiid
  • உலக செய்திகள்

இராஜதந்திரம் ஒருபோதும் முடிவடையாது: ஆனால் ஈரான் இனி அமெரிக்காவை நம்பாது!!

ஈழத்தமிழன் Juni 18, 2025
பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்காவை தாக்குவோம் – ஈரான் எச்சரிக்கை! irak

பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்காவை தாக்குவோம் – ஈரான் எச்சரிக்கை!

Juni 15, 2025
இஸ்ரேலை உலுக்கிய ஈரானிய ஏவுகணைகள்! iiidkkd

இஸ்ரேலை உலுக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

Juni 15, 2025

திரைப்பக்கம்

Schwarz Paar Gold Folie Illustrationen Geburtstag Grüße Slideshow Video (2)
  • திரைப்பக்கம்

‹பறவாதி. முழுநீளத் திரைப்படம் பொஃகும் நகர் திரையரங்கல் 29.06 2025

ஈழத்தமிழன் Juni 17, 2025
தமிழில் அறிமுகமாகும் இலங்கை நடிகை! 1355861

தமிழில் அறிமுகமாகும் இலங்கை நடிகை!

Juni 15, 2025
கல்விஹசான் துலக்ஷினி சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை, பெற்றுள்ளார். 2

கல்விஹசான் துலக்ஷினி சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை, பெற்றுள்ளார்.

Juni 14, 2025

நினைவில்

506453669_1131825852321749_3325503549581523945_n (1)
  • நினைவில்

ஈழ நேசிப்பாளர் மணிவண்ணன் அவர்களது நினைவு தினம் 15.06.2025

ஈழத்தமிழன் Juni 15, 2025
யாழில் பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவுதினம் po sivakumar 05.06

யாழில் பொன் சிவகுமாரனின் 51 ஆவது நினைவுதினம்

Juni 5, 2025
கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி மீது தாக்குதல்!! canada thupi

கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி மீது தாக்குதல்!!

Mai 28, 2025

ஆக்கங்கள்

495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

ஈழத்தமிழன் Mai 4, 2025
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025

விளையாட்டு

Champions league
  • விளையாட்டு

சம்பியன் லீக் முதல் முதல் வென்றது பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன்

ஈழத்தமிழன் Juni 2, 2025
சுவிஸில் கால்பந்தாட்டத்தில் ஈழத்தமிழனின் சாதனை aswin

சுவிஸில் கால்பந்தாட்டத்தில் ஈழத்தமிழனின் சாதனை

Mai 30, 2025
பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025 WhatsApp Image 2025-05-26 at 01.16.31_6644a1ee

பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025

Mai 26, 2025

மருத்துவம்

chichen
  • மருத்துவம்

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

ஈழத்தமிழன் März 17, 2025
இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள் th

இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள்

Januar 7, 2025
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு! Cancer Vaccine (1)

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு!

Dezember 19, 2024

You may have missed

Teal And Golden 25th Anniversary Celebration Facebook Post
  • தாயக செய்திகள்

ஸ்ரீதரன் எழுப்பிய ஐந்து புகார்களில், மண்டைத்தீவில் உள்ள கல்லறைகள் தொடர்பானது மட்டுமே போதுமான ஆதாரங்கள்!

ஈழத்தமிழன் Juni 18, 2025
a0611b54-96e9-44c7-8041-e78442c1db43
  • Uncategorized

செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் ஆளுனரிடம் கேட்டறிந்த பிரிட்டன் தூதுவர்

ஈழத்தமிழன் Juni 18, 2025
WhatsApp Image 2025-06-18 at 16.54.56_8bd26abe
  • தாயக செய்திகள்

இரகசிய வாக்கெடுப்பால் வலி. கிழக்கை பறிகொடுத்த தமிழரசு

ஈழத்தமிழன் Juni 18, 2025
dkdiid
  • உலக செய்திகள்

இராஜதந்திரம் ஒருபோதும் முடிவடையாது: ஆனால் ஈரான் இனி அமெரிக்காவை நம்பாது!!

ஈழத்தமிழன் Juni 18, 2025

திரைப்பக்கம்

‹பறவாதி. முழுநீளத் திரைப்படம் பொஃகும் நகர் திரையரங்கல் 29.06 2025 Schwarz Paar Gold Folie Illustrationen Geburtstag Grüße Slideshow Video (2)

‹பறவாதி. முழுநீளத் திரைப்படம் பொஃகும் நகர் திரையரங்கல் 29.06 2025

Juni 17, 2025
தமிழில் அறிமுகமாகும் இலங்கை நடிகை! 1355861

தமிழில் அறிமுகமாகும் இலங்கை நடிகை!

Juni 15, 2025
கல்விஹசான் துலக்ஷினி சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை, பெற்றுள்ளார். 2

கல்விஹசான் துலக்ஷினி சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை, பெற்றுள்ளார்.

Juni 14, 2025
Dream line production இன் அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு அதிதிகளில்மது சுதா கலந்து கொண்டார் 505138782_24176449248639551_2036247778791879695_n

Dream line production இன் அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு அதிதிகளில்மது சுதா கலந்து கொண்டார்

Juni 8, 2025
வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு – இயக்குனர் கௌதமன் சூளுரை.! MG_8471-1

வன்னிக்காடு படைப்பை உருவாக்குவதே எனது இலக்கு – இயக்குனர் கௌதமன் சூளுரை.!

Juni 7, 2025
‹ஜெயிலர் 2› படப்பிடிப்பில் நடந்தது என்ன ? Cinema_tharshi_rr

‹ஜெயிலர் 2› படப்பிடிப்பில் நடந்தது என்ன ?

Juni 2, 2025
März 2025
M D M D F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
« Feb   Apr »
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.