
மட்டக்களப்பு வாகரையில் பற்ற வைத்த தீ!
வனவள திணைக்களம்
என்றாய் நீ!
அல்லோல பட்டதே அன்று
வாகரை!
மூன்றாம் கட்டை.
நான்காம் கட்டை.
கல்லரிப்பு.
பொறுக்க முடியலையே !
நெஞ்சம் பொறுக்க முடியலையே!
நீதிகேட்டு சென்றனர்
காவல் நிலையம்.
நீதி தர மறுத்த நீங்கள்.
ஒப்புக்கு
கூட்டியது ஒரு கூட்டத்தை !
அமைதியாக முடிந்தது என்றனர் கூட்டம்!
பறந்தது அறிக்கை
மேல் மட்டத்திற்கு!
மீறப்படுகிறது மனித உரிமை!
தொடர்கின்றது அடக்கு முறை!
அநுர ஆட்சியும் விதி விளக்கல்ல!
பாதிக்கப் பட்டது அப்பாவி தமிழ் மக்களே! அப்பாவி தமிழ் மக்களே!
தமிழராய் பிறந்தது எமது குற்றமா?
தமிழராய் பிறந்தது எமது குற்றமா?
யார்வந்தாலும் ஆட்சியாளன் பேரினவாதியே !
அவன்
தரமாட்டான் ஒரு கணமும் நீதியை! அவன் தரமாட்டான் ஒரு கணமும் நீதியை!
அடங்காத் தமிழா!நீ அடங்காதே!
அடங்காத் தமிழா! நீ அடங்காதே!
வெகுண்டெழு அநீதிக்கு எதிராய்!வெகுண்டெழு அநீதிக்கு எதிராய்!
பொருளாதாரத்தால் வறண்ட நாட்டை,
கட்டியெழுப்ப
விவசாயம் செய்தது குற்றமா?
விவசாயம் செய்தது குற்றமா?
வடக்கும் கிழக்கும் எமது பூமி?
எம்மை தடுப்பதற்கு நீ யார்?
எம்மை தடுப்பதற்கு
நீ யார்!
வாகரை உன் அப்பன் வீட்டுச் சொத்தா?சொல்லு!
வாகரை உன் அப்பன் வீட்டு சொத்தா?
எமது வரிப் பணத்தை ஊதியமாய் பெறும்
உனக்கு,
தெரியுமா ?நெற்றி வியர் வையின் உழைப்பு!
யாருக்கடா கைவிளங்கிட்டாய் நீ ?யாருக்கடா கை விளங்கிட்டாய்!
நாம் யாரென்று காட்டுகிறோம் பார்!
ஏழையின் குடிசையை எரித்த கயவனே,
அந்த கருமா உங்களை வாழ விடாது பாராய்.
மட்டக்களப்பு வாகரையில் பற்றவைத்த தீ!
வனவளத் திணைக்களம் என்றாய் நீ!
வன வளத் திணைக்களம் என்றாய் நீ!
ஆக்கம்
ச.சிவயோகநாதன்
[சீலன்]