
நிலநடுக்கத்தின் மையப்பகுதி மே ஹாங் சன் மாகாணத்திலிருந்து வடமேற்கே சுமார் 271 கி.மீ தொலைவில் இருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் (Thailand) சியாங் மாய் மற்றும் சியாங் ராய் ஆகிய இடங்களில் வசிப்பவர்களால் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை மார்ச் மாதம் 28 ஆம் திகதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்திலிருந்து நேற்று (12) வரை மியன்மார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 468 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.