
மெய்யடியார்களே!
மணவாளக்கோல விழா 24.04.2025 வியாழக்கிழமை
சேர்மனி டோட்முண்ட் மாநகரில் எழுந்தருளி, அடியார்களுக்கு அருள்பாலித்துவரும் அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரப் பெருமான் ஆலயத்தின் கும்பாபிசேக தின, மணவாளக்கோல விழா, மங்களகரமான விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 11ம் திகதி வியாழக்கிழமை (24.04.25) காலை 08.00 மணிக்கு ஆரம்பிக்க இறையருள் கைகூடியுள்ளது. காலை சங்காபிசேகமும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று மாலை எம்பெருமானின் திருக்கல்யாண வைபவமும் உள்வீதி திருவுலாவும் நடைபெறும். அடியார்கள் வருகைதந்து எம்பெருமானைத் தரிசித்து, பேரானந்தப் பெருவாழ்வு பெற்றேகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சங்காபிசேக நிகழ்வுகள் : காலை 08.00 மணிக்கு ஆரம்பம். திருக்கல்யாண நிகழ்வுகள் : மாலை 05.30 மணிக்கு ஆரம்பம்
மதியம் அன்னதானம் நடைபெறும்
பிரதோசம் : 25.04.25 வெள்ளி. 09.05.25 வெள்ளி. 24.05.25 சனிப்பிரதோசம் அட்சய திருதியை 30.04.25 புதன்கிழமை. சித்திராப் பூரணை 12.05.25 திங்கள்.
மேலதிகத் தொடர்புகளுக்கு : 0231 162377, 0231 4270431, 01728045421
வங்கி விபரம்
Sivan Tempel Dortmund e.V
Bank: Commerzbank. IBAN: DE114408 0050 0119 1512 00, BIC: DRESDEFF440
இவ்வண்ணம்
ஆலய பரிபாலனசபையினர்
Sivan Tempel Dortmund e.V. Kiefer str 24, 44225 Dortmund (Hombruch) T.P – 0231 72515165, Fax- 0231 72515166, kpd;dQ;ry; : info@sivantempel-dortmund.de